மரவந்தே வரும் பயணிகள் சூரிய நகரம் என்று அழைக்கப்படும் குந்தபுராவுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற குந்தேஸ்வரா கோயில் உள்ளது.
இந்த நகரத்தை 16-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய மற்றும் ஜேர்மன் நாடுகளை சேர்ந்த மதப் பிரச்சார குழுக்கள் நிர்மாணித்ததாக சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் பைந்தூர் மன்னர்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கிய குந்தபுராவை, திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்கு பின் ஆங்கிலேயர்கள் நிரவகித்து வந்தனர்.
இதன் வடப்புறம் பஞ்சகங்கவலி ஆறும், கிழக்கில் கலகர் நதியும், மேற்கே அரபிக் கடலும் சூழ்ந்து இதை ஒரு தீபகற்பமாக மாற்றி இருக்கிறது. பயணிகள் இங்கிருந்து கொடி மற்றும் கங்கொல்லி கிராமங்களுக்கு படகுகள் மூலம் செல்லலாம்.



Click it and Unblock the Notifications