மதுரா அதன் புராதனமான இடங்கள் மற்றும் ஆன்மீக வழிபாட்டுத் தலங்களுக்கு ஏற்கனவே புகழ் பெற்று இருப்பினும், நாட்டின் முன்னணி தொழிற்குழுமங்களுள் ஒன்றான பிர்லா குடும்பத்தினரால் நிறுவப்பட்டுள்ள கீதா மந்திர் இந்த புகழ் மாலையில் கோர்க்கப்பட்டுள்ள மிக சமீபத்திய இணைப்பாகும்.
கீதா மந்திரில் உள்ள மதிற்சுவர்களில், இந்துக்களின் புனித நூலாக போற்றப்படும் பகவத் கீதாவிலிருந்து எடுக்கப்பட்ட உபதேசங்கள் மற்றும் உரைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
பிரதான இந்துக் கடவுளர்களின் நேர்த்தியான சிற்பங்களுடன் மிக அழகாக இது காட்சியளிக்கின்றது. பல்வேறு இந்துக் கடவுள்களை வழிபட்டு தம் பிரார்த்தனைகளை செலுத்தும் பொருட்டு, சுற்றுலாப் பயணிகள் இவ்விடத்தை முற்றுகையிடுகின்றனர்.
இதன் நேர்த்தியான ஓவியங்கள் மற்றும் கட்டுமானம் ஆகியவை அசல் இந்துக்களின் கடந்த கால பண்பாடு, பாரம்பரியம் மற்றும் பாணிகளுக்கு வாழ்த்துரை வழங்குவது போல் அமைந்துள்ளன.
வாரத்தின் எல்லா நாட்களிலும் இக்கோயில் திறந்து வைக்கப்படுகின்றது. மிக விசேஷமான நிகழ்வுகளான ஹோலி அல்லது ஜன்மாஷ்டமி ஆகியவற்றின் போது சிறப்பு வழிபாடுகள் இங்கு நடத்தப்படுகின்றன. இச்சமயங்களில், கோயில் எழில் பொங்க அலங்கரிக்கப்பட்டு, விளக்குகள் ஏற்றி வைக்கப்படுகின்றன.



Click it and Unblock the Notifications