அறிவை தேடுபவர்களுக்கு ஒரு ஆசானாக, குருவாக சிவபெருமானை தோற்றமளிக்கச் செய்யும் கோவில் தான் தட்சிணாமூர்த்தி கோவில். தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் இருப்பது தமிழ்நாட்டிலும், நாட்டின் தென் பகுதிகளிலும் மிகவும் பிரபலமானது.
தட்சிணாமூர்த்தி என்றால் 'தெற்கு திசையைப் பார்த்தபடி இருப்பவர்' என்று பொருளாகும். வழக்கமாக ஒவ்வொரு கோவிலிலும், கிழக்கு நோக்கி வைக்கப்படும் மூலவர் சிலைகள், தட்சிணாமூர்த்தி கோவிலில் மட்டும் தெற்கு திசையைப் பார்த்தபடி வைத்திருப்பார்கள்.
அதேபோல, தட்சிணாமூர்த்தி சிலையானது வழக்கமாக ஒரு ஆலமரத்தினடியில் நான்கு கைகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். இவர் வலது காலடியில் அறியாமையின் உருவாக கருதப்படும் அபஸ்மாரா என்பவரை போட்டு மிதித்தபடியும் மற்றும் இவருடைய இடது காலை தொடைவரை மடக்கியபடியும் நின்றிருப்பார்.
ஒரு கையில் நெருப்பு ஜுவாலையையும், மற்றொரு கையில் சர்ப்பத்தையும், மற்றுமொரு கையில் ஒரு ஜெபமாலையையும் கொண்டிருப்பார் சிவபெருமான். இவரது வலது கை வழக்கமாகவே அறிவின் அடையாளமான ஞான முத்திரையையும் மற்றும் இடது கை அருள் வழங்கும் அடையாளமான அபய முத்திரையையும் கொண்டிருக்கும்.
மிகவும் சில இடங்களில் மட்டுமே தட்சிணாமூர்த்தியாக காட்சியளிக்கும் சிவபெருமானை மயிலாடுதுறையில் காண்பது உண்மையில் உங்கள் சுற்றுலாவை அர்த்முள்ளதாக மாற்றும் விஷயமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications