மேடக் நகருக்கு வெகு அரகில் அமைந்திருக்கும் பப்பிகொண்டலு அல்லது பப்பி குன்று, அதன் இயற்கை அழகில் காஷ்மீருக்கு இணையானது. இந்தப் பகுதியில் கோதாவரி ஆற்றினால் பிரிந்து கிடக்கும் மலைத்தொடர்களின் காரணமாக தெலுங்கு மொழியில் 'பிரிவினை அல்லது பிரித்தல்' என்று பொருள்படும்படி பப்பிகொண்டலு என்று இந்த மலைப்பகுதி அழைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மேலிருந்து பார்க்கையில் இந்த மலைத்தொடர்கள் பெண்ணின் கூந்தலில் காணப்படும் பிரிக்கப்பட்ட பின்னல்களை போல காட்சியளிக்கும்.
பப்பிகொண்டலு மலைப்பகுதி முனிவாட்டம் என்ற அழகிய அருவியின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த இடத்தை பத்ராச்சலம் மற்றும் ராஜமுந்திரி பகுதிகளிலிருந்து படகுப்பயணம் மூலம் சுலபமாக அடையலாம்.
மேலும் பப்பிகொண்டலு வனவிலங்கு சரணாலயம் புலி, சிறுத்தை, புள்ளி மான், குள்ள நரி போன்ற விலங்குகளுக்கு வாழ்விடமாக இருந்து வருவதோடு, எண்ணற்ற புலம்பெயர் பறவைகளுக்கும் புகலிடமாக திகழ்ந்து வருகிறது.



Click it and Unblock the Notifications