நாகர்ஜுனாகொண்ட எனும் தொன்மையான புத்த மத தீவு நகரம் தற்போது ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்த நகரம் நாகர்ஜுனாசாகர் நகருக்கு வெகு அருகாமையிலும், ஹைதராபாத் நகரிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது.
நாகர்ஜுனாகொண்ட நகரம் 1960-களில் நாகர்ஜுனாசாகர் அணை கட்டப்பட்டபோது நீரில் மூழ்கிய ஒரு குன்றிலிருந்து உருவாகியது ஆகும். அவ்வாறு நீரில் மூழ்கிய குன்று பழங்காலங்களில் ஸ்ரீ பர்வதம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.
இந்தியாவின் புகழ்பெற்ற புத்த மத ஸ்தலமாக கருதப்படும் இந்த தீவு நகரம் நாடு முழுவதுமிருந்து ஏராளமான பயணிகளையும், யாத்ரீகர்களையும் ஈர்த்து வருகிறது. இந்த நகரமும் நாகர்ஜுனாசாகரை போலவே புத்தரின் போதனைகள் இப்பகுதிகளில் பரவுவதற்கு முக்கிய காரணமானவரான நாகர்ஜுனாவின் நினைவாக நாகர்ஜுனாசாகர் என்ற பெயரை பெற்றது.
அதோடு இந்த நகரம் புத்தர் வாழ்ந்த மற்றும் அவர் மறைவுக்கு பிற்பட்ட காலங்களில் புத்த மதத்தை பயிற்றுவிக்கும் கல்வி மையமாக திகழ்ந்து வந்தது என்ற வரலாற்று உண்மை சமீபத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அந்த காலங்களில் இந்த நகரத்தில் எண்ணற்ற புத்த மடாலயங்கள், தொலைதூரத்திலிருந்து வந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை அளிக்கும் பல்கலைகழகங்களாக இருந்து வந்தன.



Click it and Unblock the Notifications