கிருஷ்ணா ஆற்றின் கரையில் உள்ள ஒரு அழகிய கிராமம் இந்த நந்திகொண்டா ஆகும். நாகர்ஜுனசாகருக்கு வெகு அருகில் இந்த கிராமம் அமைந்துள்ளது.விஜயபுரி எனும் சிறுநகரத்திலிருந்து இந்த நந்திகொண்டா கிராமத்திற்கு எளிதாக சென்றடையலாம். புராதன காலத்தில் இஷவாஹு எனும் ராஜவம்சத்தினர் ஆண்ட ராஜ்ஜியமே இந்த விஜயபுரி ஆகும்.
நல்கொண்டாவுக்கு அருகிலுள்ள முக்கியமான சுற்றுலாத்தலமாக இந்த நந்திகொண்டா பிரசித்தி பெறக்காரணம் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பௌத்த ஸ்தலங்களாகும். புத்தவிகாரைகள், கூடங்கள் மற்றும் தூண்களைக்கொண்ட இந்த பௌத்த ஸ்தலங்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வரலாற்று ஆர்வலர்கள் அவசியம் விஜயம் செய்யவேண்டிய ஒரு ஸ்தலம் இந்த நந்திகொண்டா ஆகும். பௌத்த அகழ்வாராய்ச்சி ஸ்தலங்கள் தவிர இப்பகுதியில் ஒரு புராதன கோட்டையையும் பயணிகள் காணலாம். இஷவாஹு வம்சத்தினர் கட்டியுள்ள இந்த கோட்டை தற்போது சிதிலமடைந்து காட்சியளிக்கிறது.
இப்பகுதியில் ஒரு காலத்தில் கோலோச்சிய இஷவாஹு ராஜபரம்பரையின் மஹோன்னதத்துக்கு சான்றாக இந்த கோட்டை வீற்றிருக்கிறது. இந்த கோட்டையில் இருந்த சில புராதனப்பொருட்கள் தற்போது மத்திய தொல்லியல் துறையின் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.



Click it and Unblock the Notifications