நல்கொண்டா மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமம் இந்த பில்லலமரி ஆகும். இங்கு காகதீய வம்ச மன்னர்களால் கட்டப்பட்டுள்ள கோயில்களுக்கு இந்த கிராமம் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த சிறிய கிராமத்தின் உன்னதமான வரலாற்றுப்பின்னணியை எடுத்துரைக்கும் விதத்தில் இந்த அழகிய கோயில்கள் வீற்றுள்ளன.
காகதீய வம்சத்தினரின் தனித்தன்மையான கோயிற்கட்டுமான பாணிக்கான எடுத்துக்காட்டாகவும் இந்த கிராமத்திலுள்ள கோயில்கள் விளங்குகின்றன. துரதிர்ஷ்டவசமாக நீண்ட காலம் கவனிக்கப்படாமல் இருந்ததினால் இந்த கோயில்களில் சில சிதிலமடைந்து காட்சியளிக்கின்றன.
இருப்பினும் இவற்றில் ஒன்று மட்டும் நல்ல நிலையில் காணப்படுகிறது. இது சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டுள்ள சென்னக்கேசவ ஸ்வாமி கோயிலாகும். காகதீய வம்சத்தினரின் உன்னத கட்டடக்கலை அம்சங்களை இந்த கோயிலில் பார்க்கலாம்.
தரையிலிருந்து 4 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பீடம் போன்ற அமைப்பின் மீது நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் வாசலில் ஒரு கம்பீரமான நந்தி சிலை பக்தர்களை வரவேற்கிறது.