கோடி கோடியாய் பணம் வைத்திருக்கும் கோடீஸ்வரர்கள் பாவம் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், உலகைச் சுற்றிப் பார்ப்பதிலும், ஆடம்பர பொருட்களை வாங்குவதிலும் பணத்தை செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், இங்கே ஒரு கோடீஸ்வரர் நிறைய பணம் செலவழித்து, கடலுக்கடியில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்யப் போகிறாராம்! கடந்த வருடம் இதே போன்று சென்ற 5 பேர், அந்த நீர்மூழ்கி கப்பல் வெடித்து இறந்து விட்டனர்! இருந்தும் இங்கே ஒருவர் செல்லுகிறார்!
டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்ய விரும்பும் கோடீஸ்வரர்கள்
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் பிரமாண்டமான டைட்டானிக் மூழ்கி ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் கூட டைட்டானிக்கை பற்றிய பெசுகள் தொடந்து கொண்டே தான் இருக்கின்றன. அதனால் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள கோடீஸ்வரர்கள் பலரும் மூழ்கிய டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்வதிலும், சென்று காண்பதிலும் ஆர்வம் காட்டி வந்தனர். ஓஷன்கேட் எனப்படும் நிறுவனம் பில்லியனர்களை நீர்மூழ்கி கப்பலில் ஏற்றிக் கொண்டு டைட்டானிக் கப்பலை காண்பித்து அழைத்து வந்தது.
கடலுக்கடியில் வெடித்து சிதறிய 5 கோடீஸ்வரர்கள்
கடந்த வருடம் டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காணும் பயணத்தின் போது டைட்டன் எனும் நீர்மூழ்கிக் கப்பல் ஐந்து கோடீஸ்வரர்களை ஏற்றிக் கொண்டு சென்றது. ஆனால் அவர்கள் அந்த நீர்மூழ்கி கப்பலுடன் ஆழ்கடலில் மூழ்கி வெடித்து இறந்தனர். இந்த சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்குப் பிறகு, ஓஹியோவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் ஆபத்தான பயணத்தை முயற்சிக்க திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பர்களில் ஒருவரான லாரி கானர், ட்ரைடன் நீர்மூழ்கிக் கப்பல்களின் இணை நிறுவனர் பேட்ரிக் லாஹேயுடன் 12,400 அடி (2.3 மைல்கள்) க்கு மேல் மூழ்க திட்டமிட்டுள்ளார்.

சாதிக்க விரும்பும் லாரி கானர்
கடல் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், நீங்கள் சரியான வழியில் சென்றால், அது அற்புதமானதாகவும், சுவாரஸ்யமாகவும், உண்மையில் வாழ்க்கையை மாற்றக்கூடியதாகவும் இருக்கும் என்பதை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நான் காட்ட விரும்புகிறேன் என்று லாரி கானர் கூறியுள்ளார்.
பாதுகாப்பான வெற்றிகரமான டைவுக்கு முயற்சி
டிரைடன் 4000/2 அபிசல் எக்ஸ்ப்ளோரர் என்பது பேட்ரிக் லாஹே வடிவமைத்த $20 மில்லியன் மதிப்புள்ள ஒரு கப்பல் ஆகும். இரண்டு நபர்களைக் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ஆழமான கடலில் மீண்டும் மீண்டும் பயணம் செய்ய முடியும் என்று கானர் கூறினார். மற்றொரு நோக்கம், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நீங்கள் ஒரு புரட்சிகர, முதல்-வகையான துணையை உருவாக்கி அதை பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் ஆழமான ஆழத்திற்கு டைவ் செய்ய முடியும் என்பதை நிரூபிப்பதாகும்.
ஏற்கனவே அசாத்திய சாதனைகளை செய்துள்ள கானர் மற்றும் லாஹே
கானர் அவரது நண்பரான லாஹேவுடன் ஏற்கனவே பல அசாத்திய செயல்களை செய்துள்ளார். கானர் மற்றும் லாஹே முன்பு 2021 இல் மரியானா அகழியில் ஐந்து நாட்களில் மூன்று டைவ்களை முடித்தனர். 2022 இல், கானர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஸ்பேஸ்எக்ஸின் முதல் தனியார் பட்டய விமானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இவர்கள் இருவரும் கூடிய விரைவில் டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்ய கிளம்புவார்கள்!



Click it and Unblock the Notifications





