டெல்லியில் உள்ள கிழக்கு கைலாஷ் பகுதியில், நொய்டாவுக்கு மிக அருகிலுள்ள சான்ட் நகர் என்ற இடத்தில் உள்ள பிரமிக்க வைக்கும் இஸ்க்கான் கோவிலை சர்வதேச கிருஷ்ண பக்தர்கள் சங்கத்தால் (International Society of Krishna Consciousness) 1998-ம் ஆண்டு கட்டப்பட்டது.
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்று பக்தர்கள் கிருஷ்ணரை நோக்கி முழங்கியவாறே செல்வதால் இந்த இஸ்க்கான் கோவில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
பகவத் கீதையில் சொல்லப்பட்டிருக்கும் நற்செய்தியை உலகுக்கு பரப்புவதை நோக்கமாகக் கொண்டு, அதன் பொருட்டாகவே ஆச்சார்ய் பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதா என்பவர் இஸ்க்கான் கோவிலை கட்ட முயற்சி எடுத்தார்.
இதில் புதுமையாக இரஷ்ய கலைஞர்கள், இந்த கேவிலின் சுவர்களில் உள்ள ராமர், சீதா தேவி, கிருஷ்ணர்மற்றும் இராதா ஆகியோரின் கதைகளை எடுத்துச் சொல்லும் கலைநயமிக்க வடிவமைப்புகள் மற்றும் ஓவியங்களை உருவாக்கியுள்ளனர்.
பிரார்த்தனைக் கூடமாக இருக்கும் மத்திய கூடம் தான் இந்த கோவிலின் பிரதானமான இடமாகும். இராதா மற்றும் கிருஷ்ணரின் அற்புதமான சிலைகளை கொண்டிருக்கும் அருங்காட்சியத்தை இந்த கூடம் கொண்டிருக்கிறது.
இந்த கோவிலில் மகாபாரதம் மற்றும் இராமயணம் தொடர்பான பல்லூடக காட்சிகள் தொடர்ச்சியாக காட்டப்படுவதுடன், தினசரி பிரார்த்தனைகள், கீர்த்தனைகள், ஆரத்திகள் மற்றும் பஜனைகள் ஆகியவையும் காலை மற்றும் மாலை வேளைகளில் செய்யப்பட்டு வருகின்றன.



Click it and Unblock the Notifications