அருகில் இருக்கும் ஜோனா கிராமத்தின் பெயராலேயே வழங்கப்படும் இந்த இடத்தில் புத்தர் குளித்ததாக நம்பப்படுகிறது. ராஜா பல்தேவ்தாஸ் என்பவரால் கட்டப்பட்டுள்ள புத்த கோவில் ஒன்று மலை உச்சியில் உள்ளது. ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழனில் இங்கு வரும் சந்தை மக்களிடம் புகழ்பெற்று விளங்குகிறது.
ஜோனாவை மக்கள், கங்கா கட்டில் இருந்து வருவதால் கங்கா நலா என்றும் அழைக்கின்றனர் 453படிகள் இறங்கி நீர்வீழ்ச்சியை அடையலாம்.
ராஞ்சி பீடத்தின் முகட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி கங்கை மற்றும் ராரு நதியில் இருந்து நீர் சேர்க்கிறது. 43அடி உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியின் சிறப்பான தோற்றத்தைக் காண குறைந்தபட்சம் 500படிகளாவது தேவைப்படுகிறது.



Click it and Unblock the Notifications