கோயம்புத்தூரில் இருந்து ஒரு நாள் பயணமாக பல இடங்களுக்கு நீங்கள் செல்லலாம். பழங்கால கோவில்கள், நவீன கட்டிடங்கள், மால்கள், மூச்சடைக்கக்கூடிய மேற்கு தொடர்ச்சி மலைகள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள் என கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனைத்து தரப்பினருக்குமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. ஒரு நாள் பயணமாக நீங்கள் கோயம்புத்தூரில் இருந்து ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு செல்லலாம். வழியெங்கிலும் பசுமையை ரசித்துக் கொண்டே உற்சாகமாக ரைடு சென்று வனவிலங்குகளையும், அழகான இயற்கை காட்சிகளையும் கண்டு மகிழலாம் மக்களே! இதோ உங்களுக்கான பெஸ்ட் ட்ராவல் டிப்ஸ்!

கோயம்புத்தூரில் இருந்து பெஸ்ட் ஒரு நாள் ட்ரிப்
பசுமை, வனவிலங்குகள், சாகசங்கள் மற்றும் இயற்கை காட்சிகளை ரசிக்க ஆனைமலை புலிகள் காப்பகம் ஒரு சரியான சாய்ஸ் ஆகும். ட்ரெக்கிங், யானை சஃபாரி, புகைப்படம் எடுத்தல், ஜங்கிள் சஃபாரி, பறவைகள் கண்காணிப்பு என ஆனைமலை புலிகள் சரணாலயம் சுற்றுலா பயணிகளை அனுபவிக்கவும் கவரவும் பல்வேறு விஷயங்களை வழங்குகிறது. ஆனைமலை புலிகள் சரணாலயம் எல்லாவகையான சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏதோ ஒன்றை வழங்குகிறது.

கோயம்புத்தூர் to ஆனைமலை புலிகள் காப்பகம்
ள்ளாச்சியில் இருந்து 38 கிமீ தொலைவிலும், கோவையில் இருந்து 76 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இந்தியாவில் உள்ள பிரபலமான புலிகள் காப்பகங்களில் ஒன்றான இது கோயம்புத்தூரில் இருந்து ஒரு நாள் ட்ரிப் செல்ல சரியான ஐடியாவாகும். இந்த வனப்பகுதி பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம், இரவிகுளம் தேசிய பூங்கா மற்றும் சின்னார் வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றுடன் எல்லையாக உள்ளது. பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை மற்றும் கொடைக்கானல் ஆகிய நான்கு பகுதிகளும் இந்த வனப்பகுதியின் எல்லைகளுடன் சேருகின்றன.

வனவிலங்குகளை கண்டு ரசியுங்கள்
ஆனைமலை வனவிலங்கு சரணாலயத்தில் சிறுத்தைகள், யானைகள், மான்கள், மான்கள், சிவெட்டுகள், புலிகள், சோம்பல் கரடிகள், காட்டு கரடிகள், காட்டு நாய்கள், முள்ளம்பன்றிகள், பறக்கும் அணில், குள்ளநரிகள் மற்றும் பாங்கோலின்கள் போன்ற பல்வேறு வகையான வனவிலங்குகளும் விஸ்கர்டு புல்புல், புள்ளிப் புறா, ராக்கெட்-வால் கொண்ட ட்ரோங்கோ, கருப்பு தலை ஓரியோல் மற்றும் புறா போன்ற பறவை இனங்களும் உள்ளன.

அழகான பகுதிகளை ஆராயுங்கள்
இந்த வனவிலங்கு பூங்காவில் முதலைகள் வசிக்கும் அமராவதி நீர்த்தேக்கம் என்றழைக்கப்படும் இயற்கை நீர்த்தேக்கமும் உள்ளது. தவிர, இந்த அமைதியான இடமானது கரியன்சோலா மலையேற்றம், ஆனைகுந்தி சோலா, புல் மலைகள், மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு, தோப்புகள், நீர்வீழ்ச்சிகள், தேக்கு மரக்காடுகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகள் போன்ற பிற அம்சங்களும் உள்ளன. இருப்பினும், இவற்றில் சில இடங்களுக்கு அந்தந்த அதிகாரிகளிடமிருந்து முன் அனுமதி தேவைப்படும். பெற்று செல்வது அவசியம்!

டாப் ஸ்லிப் வழியாக செல்லுங்கள்
பொள்ளாச்சியில் இருந்து சுமார் 3௦ கிமீ தொலைவில் அமைந்துள்ள டாப் ஸ்லிப் சரணாலயத்திற்கான சிறந்த நுழைவாயில் ஆகும். மற்ற நுழைவாயில்கள் அமராவதி, சேத்துமடை மற்றும் வால்பாறையில் அமைந்துள்ளன. டாப் ஸ்லிப்பில் தான் வேன் சேவைகள் உள்ளன. நீங்கள் அந்த வழியாக செல்வதே நல்லது.

ட்ரெக்கிங் செய்ய மறக்காதீர்கள்
தமிழக சுற்றுலாத் துறை டாப் ஸ்லிப்பில் இருந்து ட்ரெக்கிங் பேக்கேஜ்களை வழி நடத்துகிறது. ஷோலா காடுகள், அலை அலையான புல்வெளிகள் மற்றும் தேக்கு தோட்டங்களுக்கு மத்தியில் ட்ரெக்கிங் செய்து பாருங்களேன். மிகவும் உற்சாகமாக உணருவீர்கள். கொலம்புமலை - 10 கி.மீ., அம்புலி காவற்கோபுரம் - 6 கி.மீ., கோழிகம்முத்தி-12 கி.மீ., மற்றும் கரியன் சோலா - 4 கி.மீ. ஆகியவை இங்கு மலையேற்றப் பாதைகளாக உள்ளன.

யானை சபாரி செய்து மகிழுங்கள்
டாப்சிலிப்பில் கோழிகமுதி என்றழைக்கப்படும் யானைகள் முகாமும் உள்ளது, அதில் பயிற்சி பெற்ற யானைகள் அல்லது கும்கி யானைகளின் சிறந்த தொகுப்பு உள்ளன. நீங்கள் டாப் ஸ்லிப்பில் இருந்து யானை சஃபாரி செய்யலாம். குறிப்பிட்ட நேரத்தில் யானைகளுக்கு உணவளிப்பதைக் கூட நீங்கள் பார்த்து மகிழலாம்.

குளிர் காலத்தில் செல்லுங்கள்
சரணாலயத்தைப் பார்வையிடவும் இயற்கையை அதன் சிறந்த அனுபவத்தை அனுபவிக்கவும் சிறந்த நேரம் குளிர்கால மாதங்கள் ஆகும். ஆகவே அக்டோபர் முதல் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் செல்லுங்கள். குளிர்காலத்தில் தட்பவெப்பம் இதமாகவும் குளிராகவும் இருக்கும், மேலும் விலங்குகளை அவற்றின் இயற்கையான மற்றும் வசதியான வாழ்விடங்களில் நீங்கள் பார்க்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

தேவைப்படும் இதர தகவல்கள்
பூங்கா திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை
வனப்பகுதி திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை
யானை சஃபாரி செய்யப்படும் நேரம்: 11 மணி முதல் 2 மணி வரை
யானை சஃபாரிக்கான கட்டணம்: ரூ. 200 ஒரு நபருக்கு
ஜீப் சஃபாரி செய்யப்படும் நேரம்: 1௦ மணி முதல் 2 மணி வரை
ஜீப் சஃபாரிக்கான கட்டணம்: ரூ. 2000 (8 நபர்களுக்கு)
ட்ரெக்கிங் செய்யப்படும் நேரம்: 7 மணி முதல் 2 மணி வரை
நுழைவுக்கட்டணம்: ரூ. 80 ஒரு நபருக்கு
கேமரா கட்டணம்: ரூ. 50
எல்லா தகவல்களையும் தெரிந்துக் கொண்டீர்கள் அல்லவா? இப்பொழுதே பிளான் பண்ணுங்களேன். உங்கள் குடும்பம், குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் ஒரு நாள் ட்ரிப் சென்று வாருங்கள். நிச்சயம் உற்சாகமாக உணருவீர்கள்!



Click it and Unblock the Notifications






