Search
  • Follow NativePlanet
Share
» »மைசூர் ட்ரிப்ல ஸ்ரீரங்கப் பட்டிணம் போகாம இருந்தா எப்படி? அங்க என்னல்லாம் ஸ்பெஷல்னு தெரிஞ்சுக்கலாமா?

மைசூர் ட்ரிப்ல ஸ்ரீரங்கப் பட்டிணம் போகாம இருந்தா எப்படி? அங்க என்னல்லாம் ஸ்பெஷல்னு தெரிஞ்சுக்கலாமா?

மைசூர் ட்ரிப்ல ஸ்ரீரங்கப் பட்டிணம் போகாம இருந்தா எப்படி? அங்க என்னல்லாம் ஸ்பெஷல்னு தெரிஞ்சுக்கலாமா?

By Bala Karthik

மைசூருவின் பாரம்பரிய நகரமான ஸ்ரீ ரங்கப்பட்டினம் 15 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இந்த நகரமானது காவேரி நதியுடன் மூடப்பட்டு காணப்பட, நதி தீவு நகரத்தை நோக்கியும் நம்மை அழைத்து செல்கிறது. இந்த நகரத்தின் பெயரானது பெயர்பெற்ற ரங்கநாத சுவாமி ஆலயத்தினால் கிடைத்திட, தென்னிந்தியாவில் காணப்படும் முக்கியமான ஆலயங்களுள் ஒன்றாக இது காணப்படுகிறது.

ஸ்ரீ ரங்கப்பட்டினம் அன்று நினைவுக்கெட்டாத நகர்ப்புற மையங்களையும், யாத்ரீக தளங்களையும் கொண்டிருந்தது. விஜயநகர பேரரசின்போது, இவ்விடமானது அரச குடும்பத்து வழக்கத்தை கொண்டிருக்க, அருகாமையில் பேரரசுகளின் நிலத்துவ பிரபுவின் மைசூரு மற்றும் தலக்காடின் அரசுகளும் காணப்பட்டது.

இவ்விடமானது மேலும், ஹைதர் அலி மற்றும் அவருடைய மகனான திப்பு சுல்தான் கட்டுப்பாட்டில் மைசூரு ராஜ்ஜியத்தையும் தலைநகரமாக கொண்டிருந்தது.

வழியின் வரைப்படம்:

வழியின் வரைப்படம்:


ஆதிப்புள்ளி: பெங்களூரு

இலக்கு: ஸ்ரீ ரங்கப்பட்டினம்

இவ்விடத்தை காண சிறந்த நேரங்கள்: அக்டோபர் முதல் ஜூன் வரையில்

எப்படி நாம் அடைவது?

எப்படி நாம் அடைவது?

ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி?

அருகில் காணப்படும் விமான நிலையமாக பெங்களூருவின் கெம்பிகௌடா சர்வதேச விமான நிலையம் இங்கிருந்து 166 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஓர் விமான நிலையமாகும்.

தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி?

ஸ்ரீ ரங்கப்பட்டின இரயில் நிலையம் இங்கே நகரத்தின் இதயப்பகுதியில் காணப்பட, வழக்கமான இரயில்கள் பல முக்கிய நகரங்களுக்கும் மாநிலம் முழுவதுமென நாட்டின் ஒரு சிலப்பகுதிகளுக்கும் காணப்படுகிறது.

சாலை மார்க்கமாக அடைவது எப்படி?

ஸ்ரீ ரங்கப்பட்டினத்தை நாம் அடைய சிறந்த வழிகளுள் ஒன்றாக சாலை வழியானது அமையக்கூடும். இந்த நகரமானது சாலையுடன் சிறந்த முறையில் இணைக்கப்பட்டிருக்க, பல முக்கிய நகரத்திலிருந்து ஸ்ரீ ரங்கப்பட்டினத்திற்கு வழக்கமான பேருந்துகளும் காணப்படுகிறது.

PC: Subhashish Panigrahi

வழிகள்:

வழிகள்:

பெங்களூருவிலிருந்து ஸ்ரீ ரங்கப்பட்டினத்துக்கு ஒட்டு மொத்தமாக 130 கிலோமீட்டர்கள் ஆகிறது. இங்கே செல்வதற்கு மொத்தம் மூன்று வழிகள் காணப்பட, அதனை நாம் இப்போது பார்க்கலாம்.

வழி 1: பெங்களூரு - பிடாடி - ராமநகரா - சன்னப்பட்னா - மாண்டியா - ஸ்ரீ ரங்கப்பட்டினம் வழி தேசிய நெடுஞ்சாலை வழி 275.

வழி 2: பெங்களூரு - தடாகுனி - கனகப்புரா - மாலவள்ளி - பன்னூர் - ஸ்ரீ ரங்கப்பட்டினம் வழி தேசிய நெடுஞ்சாலை 209.

வழி 3: பெங்களூரு - நெலமங்கலா - சோளூர் - குனிகல் - பெலூர் - நாகமங்கலா - ஸ்ரீ ரங்கப்பட்டினம் வழி தேசிய நெடுஞ்சாலை 75 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 150 A.


முதலாம் வழியை நீங்கள் தேர்ந்தெடுத்தால், ஸ்ரீ ரங்கப்பட்டினத்தை நாம் அடைய தோராயமாக 3 மணி நேரங்கள் ஆக, வழியாக தேசிய நெடுஞ்சாலை 75 அமைகிறது. இந்த வழியானது பெயர்பெற்ற நகரமான ராமநகரா, மாண்டியா, மத்தூரு என பல வழிகள் வழியாகவும் பயணிக்கிறது.

சாலைகளானது சிறந்த முறையில் பராமரிக்கப்பட, சிறந்த வேகத்தில் நம்மால் இலக்கையும் எட்ட முடிவதோடு, இலக்கை எட்ட 130 கிலோமீட்டர் நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

இரண்டாம் வழியை நீங்கள் தேர்ந்தெடுத்தால், தோராயமாக 3.5 மணி நேரத்தில் 157 கிலோமீட்டரை பெங்களூருவிலிருந்து ஸ்ரீ ரங்கப்பட்டினத்தை அடைய நமக்கு தேவைப்பட வழியாக தேசிய நெடுஞ்சாலை வழி 209ஆகவும் அமையக்கூடும். மூன்றாம் வழியை தேர்ந்தெடுத்து நாம் செல்ல, 168 கிலோமீட்டரை கடக்க 4 மணி நேரங்கள் ஆக, வழியாக தேசிய நெடுஞ்சாலை வழி 75 மற்றும் தேசிய நெடுஞ்சாலை வழி 150 A ஆகவும் ஸ்ரீ ரங்கப்பட்டினத்தை அடைய நமக்கு தேவைப்படுகிறது.

PC: Aditya Patawari

ராமநகரா மற்றும் மத்தூரின் சிறு நிறுத்தங்கள்:

ராமநகரா மற்றும் மத்தூரின் சிறு நிறுத்தங்கள்:

பெங்களூருவிலிருந்து அதிகாலையில் நாம் புறப்பட இரு காரணங்கள் தேவைப்பட, முதலாவதாக நகரத்து கூட்ட நெரிசலை தவிர்க்கவுமென, இரண்டாவதாக நெடுஞ்சாலை நெரிசலை தவிர்க்கவும் உதவக்கூடும். நெடுஞ்சாலையில் செல்லும் நமக்கு, எண்ணற்ற வழிகள் காணப்பட, காலை உணவின் மூலம் வயிற்றையும் மனதையும் நிரப்பிக்கொள்ள, பிடாடியின் தட்டை இட்லியில் தொடங்கி, காமத் லோகா ருச்சியின் சுவையூட்டும் ராமநகரா தோசையாகவும் அமையக்கூடும்.

PC: Ashwin Kumar

மத்தூருவின் வரலாற்று நகரம்:

மத்தூருவின் வரலாற்று நகரம்:

காலை உணவை நிரப்பிக்கொண்டு, வரலாற்று நகரமான மத்தூரை நாம் அடைகிறோம். இவ்விடமானது மத்தூர் வடாவிற்கு பெயர்பெற்று விளங்குகிறது. இந்த உணவால் மத்தூரில் கூட்டமும் கூடுகிறது. வெங்காயம் மற்றும் ரவை இந்த சுவையூட்டும் மத்தூர் வடாவை நமக்கு தரக்கூடும்.

எட்டாம் நூற்றாண்டை நோக்கி பழங்காலத்து ஜெய்ன் ஆலயம் நம்மை அழைத்துசெல்ல, இந்தியாவின் தொல்லியல் துறையாலும் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆலயம், செங்கற்கள் மற்றும் கற்களைக்கொண்டு கட்டப்பட, 100 அடி நீளமும், 40 அடி அகலமும் இருக்கிறது. ஷிலாபளிகேஷ் (இளைய பெண்ணின் சிலையானது), துவாரபாலகாஸ் (பாதுகாவலர்), 3.5அடி பாகுபலி சிலையெனவும் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டது.

PC: Shailesh.patil

கொக்ரேபெல்லூர்:

கொக்ரேபெல்லூர்:

இந்த கெக்ரேபெல்லூர் கிராமமானது பலவித இடம்பெயர்ந்து வரும் பறவைகளுக்கு வீடாக இனப்பெருக்க காலத்தில் விளங்க, பெங்களூருவின் எண்ணற்ற சுற்றுலா ஆர்வலர்களை மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதுமுள்ள பலரையும் ஈர்க்கிறது.

PC: T G Santosh

 மத்தூரு மசூதி:

மத்தூரு மசூதி:

இந்த மசூதி 1937ஆம் ஆண்டு கட்டப்பட, இங்கே காணப்படும் தகடின் மூலமாக, "மசூதிக்கு முன்னர் மத மற்றும் பிற ஊர்வலம் மூலம் இசைப் பயன்பாட்டைத் தடுக்க எதுவுமில்லை" என்ற வசனமானது காணப்படுகிறது.

இதனால் இஸ்லாமியர்களும், மற்ற மதத்தை பின்பற்றுபவர்களின் மத நல்லிணக்கத்திற்கும், நல்ல உறவிற்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் அமையக்கூடும்.

PC: Prof tpms

இலக்கு: ஸ்ரீ ரங்கப்பட்டினம்:

இலக்கு: ஸ்ரீ ரங்கப்பட்டினம்:


இந்த பெயர் பரிந்துரைப்படி, இவ்விடமானது ரங்க நாத பிரபுவின் நிலமாக விளங்குகிறது. ஐந்து புனித தளங்களுள் ஒன்றாக ஸ்ரீ ரங்கநாதசுவாமி காணப்பட, விஷ்ணு பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு ‘பஞ்சரங்க க்ஷேத்ரம்' என அழைக்கப்பட, இங்கே இருக்கும் தெய்வத்தை ‘ஆதி ரங்கா' எனவும் அழைக்கப்படுகிறது.

PC: Akashofficial10

நிமிஷம்பா ஆலயம்:

நிமிஷம்பா ஆலயம்:

மாபெரும் ஈர்ப்புகளுள் மற்றொன்றாக அமைவது நிமிஷம்பா ஆலயமாக அமைய, லோகபவானி நதிக்கரையில் இது காணப்படுகிறது. இந்த தேவியை வணங்கும் பக்தர்களின் கோரிக்கையை நிமிடப்பொழுதில் செவிசாய்த்து கேட்பதாக நம்பப்பட, அடுத்ததாக டரியா தௌலத்தையும் நம்மால் பார்க்க முடிகிறது.

PC: Offical Site

டரியா தௌலத் பாஹ்:

டரியா தௌலத் பாஹ்:

அழகிய தோட்டத்தின் மத்தியில் காணப்படும், டரிய தௌலத் பாஹ் திப்புசுல்தானால் 1784ஆம் ஆண்டு இந்தோ - சர்கானிக் பாணியில் தேக்குக்கொண்டு கட்டப்பட்ட கோடை வாசஸ்தலமாகும். இந்த அரண்மனை சதுர வடிவம் கொண்டிருக்க, உயர்ந்த நடைமேடையையும் கொண்டிருக்கிறது.

PC: Steve Haslam

கும்பஸ்:

கும்பஸ்:

டரிய தௌலத் பாஹ்ஹின் அழகால் நம் மனதானது குளிர்ச்சியடைய, கும்பஸை நோக்கியும் புறப்படுகிறோம். சமாதியான கும்பஸ், ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் அவருடைய அம்மாவான பாத்திமா பேகத்தின் ஆத்மா உறங்கிக்கொண்டிருக்கும் இடமாகவும் சொல்லப்படுகிறது.


இந்த அமைப்பானது பெர்சிய கட்டிடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட, பெரும் சதுர வடிவ தோட்டத்தையும் கொண்டிருப்பதோடு மசூதியை நோக்கியும் செல்லக்கூடும்.

PC: Ashwin Kumar

கரிக்கட்டா:

கரிக்கட்டா:


சில கிலோமீட்டரில் ஸ்ரீ ரங்கப்பட்டினத்தின் நகர வெளிப்புறத்தில் காணப்படுகிறது சிறுகுன்றான கரிக்கட்டா. இந்த மலையானது மைசூரு மற்றும் ஸ்ரீ ரங்கப்பட்டின நகரத்தின் அற்புதமான காட்சியை கண்களுக்கு தருகிறது. இந்த மலையில் ஆலயம் ஒன்று காணப்பட, விஷ்ணு பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்க, அதனை ‘கிரிவாசா' எனவும் அழைக்கப்படுகிறது.

PC: Nagesh Kamath

More News

Read more about: travel karnataka bangalore
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+