தூத் தலாய் மியூசிகல் கார்டன் பிச்சோலா ஏரிக்கருகிலேயே அமைந்துள்ளது. இது உதய்பூர் நகர மேம்பாட்டு டிரஸ்ட் மூலமாக பராமரிக்கப்படுகிறது. இந்த பாறைத்தோட்ட பூங்காவில்தான் ராஜஸ்தானிலேயே முதன்முதலாக இசை நீரூற்று அமைக்கப்பட்டது. பயணிகள் இங்கிருந்து தூரத்தில் ஆரவல்லி மலைகளுக்கு அப்பால் சூரியன் அஸ்தமனமாகும் புள்ளியை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.