லக்ஷ்மி சௌக் எனும் மாளிகை அரச குடும்ப மகளிர்க்காக கட்டப்பட்டுள்ளது. இது ஜனனா மஹால் அல்லது அந்தப்புறம் எனும் அரண்மனைப்பகுதியின் முக்கிய மண்டபமாக இருந்துள்ளது.
லக்ஷ்மி சௌக்கிலிருந்து ரங்க் பவன் மற்றும் படா மஹால் போன்றவற்றை அடைய முடிகிறது. இங்கு ஒரு லக்ஷ்மி தேவி திருவுருவச்சிலை உள்ளது. மைய மண்டபத்தில் பல மேவார் பாணி ஓவியங்களை பயணிகள் காணலாம்.