உடுப்பியிலிருந்து 2 அல்லது 3 கி.மீ தூரத்தில் இந்த அம்பாள் பாடி மஹாகோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 6 அடி உயரமுள்ள மஹாகாளி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அம்மா எனும் பொருளைக்கொடுக்கும் அம்பா எனும் சொல்லும், மலையில் உறைபவள் எனும் பொருளில் பாடி (பாடி= மலை) எனும் சொல்லையும் சேர்த்து இங்குள்ள தெய்வம் அம்பாள்பாடி என்று அழைக்கப்படுகிறது.இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு இங்கு அம்பாள் - பத்ரி எனும் ஒரு அருள் வாக்கு யோகியின் மூலமாக - பக்தர்களுடன் நேரில் உரையாடுவதாகும். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வெள்ளியும் மாலை நேரத்தில் நடத்தப்படுகிறது.
பக்தர்களின் சொந்த பிரச்சினைகள் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகள் அம்பாளிடமிருந்து கிடைப்பதாக ஒரு நம்பிக்கை.இந்த அம்பாள் கோயிலுக்கு அருகிலேயே உள்ள மஹா விஷ்ணுவுக்குரிய லக்ஷ்மி ஜனார்தன் கோயிலுக்கும் பக்தர்கள் விஜயம் செய்யலாம்.அம்பாள்பாடி கோயிலில் தீர்த்த ஸ்நானம், ரக்ஷயந்திரா, குங்குமரச்சனே மற்றும் மஹாபூஜா போன்ற பூஜைகள் நடத்தப்படுகின்றன.இந்த கோயிலுக்கு செல்ல அருகில் உடுப்பி ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து மஹாகாளி மற்றும் லக்ஷ்மி நரசிம்மன் கோயிலுக்கு செல்ல பஸ், ஆட்டோ, டாக்ஸி போன்றவை கிடைக்கின்றன. உடுப்பியில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதிகள் உள்ளன.