குருத்வாரா பிப்லி சாஹிப் என்று அழைக்கப்படும் இந்த குருத்வாரா அம்ரித்ஸர் நகர் பிரதான ரயில் நிலையத்திலிருந்து 1.5 கி.மீ தூரத்தில் புட்லி கர் எனும் இடத்தில் அமைந்திருக்கிறது. இந்த குருத்வாராவில் ஒரு பெரிய பீபல் மரம் அமைந்திருப்பதால் இதற்கு பீப்லி சாஹிப் என்ற பெயர் வழங்கிவருகிறது.
மூன்று முக்கியமான சீக்கிய குருக்களான குரு ராம் தாஸ்ஜி, குரு அர்ஜன் தேவ்ஜி மற்றும் குரு ஹர் கோபிந்த்ஜி ஆகியோரின் ஞாபகார்த்தமாக இந்த பிப்லி சாஹிப் குருத்வாரா 20 நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது.
பசந்த் பஞ்சமி எனும் விசேஷமான திருவிழா கொண்டாடப்படும் நாளில் இந்த குருத்வாராவுக்கு விஜயம் செய்வது சிறந்தது.