சண்டிகர் நகரத்தை ஒட்டியுள்ள சுக்னா எரியின் வடகிழக்கு பகுதியில் இந்த சுக்னா காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. சுக்னா ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான இது சண்டிகர் நகரத்தை வடிவமைத்த லெ கொர்புசியர் என்பவரால் 1958-ம் ஆண்டில் முதலில் கண்டறியப்பட்டது.
பின்னர் 1998-ம் ஆண்டில்தான் இது காட்டுயிர் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 2600 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ள இந்த காட்டுயிர் சரணாலயத்தில் பலவகையான பாலூட்டி விலங்குகள், பூச்சியினங்கள் மற்றும் ஊர்வன வகைகள் வசிக்கின்றன.
இந்தியாவிலேயே சாம்பார் மான்கள் கூட்டம் கூட்டமாக அதிக எண்ணிக்கையில் வசிப்பது இந்த சரணாலயத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவைதவிர இந்த சரணாலயத்தில் 150 வகையான பறவையினங்களும் வசிக்கின்றன. டிசம்பர் முதல் பிப்ரவரி வரையான காலத்தில் அதிக எண்ணிக்கையில் புலம்பெயர் பறவைகள் இந்த சரணாலயத்திற்கு விஜயம் செய்கின்றன.
அழகிய மலர்த்தாவரங்கள், மூலிகைத்செடிகள், புல் வகைகள், கொடிகள் மற்றும் பசுமை மாறா மரங்கள் போன்ற பல்வேறு தாவர வகைகளும் இங்கு நிரம்பியுள்ளன.



Click it and Unblock the Notifications