டெல்லியிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்பது சீக்கிய குருத்வாராக்களில் இந்த சீஸ் கஞ்ச் சாஹீப் குருத்வாராவும் ஒன்றாகும். இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான வரலாற்றுக்கதையும் சொல்லப்படுகிறது.
சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான தேஹ் பஹதூரின் நினைவுத்தலமாக இந்த குருத்வாரா எழுப்பப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்த காரணத்தால் முகலாய அரசர் ஔரங்கசீப்பின் ஆணைப்படி இந்த குருத்வாரா ஸ்தலத்தில் சீக்கிய குருவின் தலை கொய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
பல வருடங்கள் கழித்து இந்த சீக்கிய குருவின் தீவிர சீடரான பாபா பாஹேல் சிங் என்பவர் குரு கொல்லப்பட்ட அதே ஸ்தலத்தில் நினைவுச்சின்னமாக இந்த குருத்வாராவை எழுப்பியுள்ளார்.
டெல்லி சாந்தினி சௌக் பகுதியில் இந்த குருத்வாரா அமைந்துள்ளது. 1930 ம் ஆண்டில் எழுப்பப்பட்ட இந்த குருத்வாராவில் சீக்கிய குரு படுகொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் இடத்தில் ஒரு மரத்தின் அடிப்பகுதி இன்றும் காணப்படுகிறது.
இந்த குருத்வாராவுக்கு அருகிலேயே ரெட் ஃபோர்ட் எனப்படும் செங்கோட்டை, ஃபெரோஸ் ஷா கொட்லா மற்றும் ஜாமா மஸ்ஜித் போன்ற முக்கியமான சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளன.