நிஜாமுதீன் தர்க்கா ஒரு விசேஷமான சுற்றுலாத்தலம் இல்லையென்றாலும் புகழ் பெற்ற சூஃபி ஞானியான ‘நிஜாமுதீன் ஔலியா’வின் சமாதி வாசல் என்பதால் பிரசித்தி பெற்றுள்ளது.
டெல்லியில் நிஜாமுதீன் மேற்குப்பகுதியில் உள்ள இந்த தர்க்கா ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் யாத்ரீகர்களை மட்டுமல்லாமல் பிற மதத்தை சேர்ந்த பக்தர்களையும் ஈர்த்துவருகிறது.
நிஜாமுதீன் தர்க்கா வளாகத்தில் இனாயத் கான், முகலாய இளவரசி ஜஹான் அரா பேகம் மற்றும் புகழ்பெற்ற உருதுக்கவிஞர் அமீர் குஸ்ரூ ஆகியோரின் கல்லறைகளும் அமைந்துள்ளன.
இந்த கல்லறை வளாகத்தினை ஒட்டியுள்ள பகுதிகளும் பிரபலமாக அறியப்படுவதும் குறிப்பிடத்தக்கது. நிஜாமுதீன் கிழக்கு மற்றும் நிஜாமுதீன் மேற்கு என்ற இரண்டு பிரிவுகளாக இப்பகுதி அறியப்படுகிறது.
மேற்குப்பகுதி நிஜாமுதீன் தர்க்காவை உள்ளடக்கியுள்ளதோடு ஏராளமான முஸ்லிம் வணிகர்கள் வியாபாரம் செய்யும் இடமாகவும் திகழ்கிறது. கிழக்குப்பகுதி செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியாக உள்ளது. நிஜாமுதீன் ரயில் நிலையம் மற்றும் ஹுமாயூன் நினைவுச்சின்னம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த நிஜாமுதீன் பகுதி அமைந்துள்ளது.