குண்டூர் நகரத்திற்கு தென்மேற்கே 40 கி.மீ தூரத்தில் இந்த கொடப்பகொண்டா கிராமம் அமைந்துள்ளது. நர்சராவ்பேட் எனும் இடத்துக்கு வெகு அருகிலேயே உள்ள இந்த கிராமத்துக்கு எளிதில் சாலை மார்க்கமாக சென்றடையலாம். கொண்டகவுரு என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட இக்கிராமம் காலப்போக்கில் கொடப்பகொண்டா என்று மாற்றம் பெற்றுள்ளது.
இந்த கிராமத்தை ஒட்டி மூன்று சிகரங்களுடன் காட்சியளிக்கும் ஒரு மலையும் அமைந்துள்ளதால் இது திரிகூடபர்வதம் என்ற பெயராலும் பிரசித்தமாக அழைக்கப்பட்டிருக்கிறது.
கிராமத்தை சுற்றிலும் பல மலைகள் காணப்பட்டாலும் இவற்றில் திரிகூடாச்சலம் அல்லது திரிகூடாத்ரி எனும் மூன்று சிகரங்கள் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளன.
கிராமத்தின் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் இந்த மூன்று சிகரங்கள் தெரிகின்றன. இந்த சிகரங்களுக்கு பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
கொடப்பகொண்டா கிரமாத்திற்கு அருகில் குத்திகொண்டா எனும் மற்றொரு முக்கியமான ஆன்மீக ஸ்தலமும் உள்ளது. இது தட்சிண காசி என்றும் பிரசித்தமாக அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கொடப்பகொண்டாவுக்கு வருகைதரும் பயணிகள் இந்த குத்திகொண்டாவுக்கும் விஜயம் செய்யலாம்.