குண்டூர் நகரத்திற்கு தெற்கே சுமார் நான்கு மைல் தொலைவில் இந்த உப்பலபாடு இயற்கை பாதுகாப்பு பூங்கா அமைந்துள்ளது. ஏராளமான புலம்பெயர் பறவைகளை ஈர்க்கும் வகையில் இந்தப்பகுதியில் நீர்த்தேக்கங்கள் அமைந்துள்ளன.
பல அரியவகை பறவைகள், வெளிநாட்டுப் பறவைகள் மற்றும் அருகி வரும் பறவையினங்களை இங்கு பார்க்கலாம். புள்ளி கூழைக்கடா மற்றும் வெளிநாட்டு வண்ணக்கொக்கு போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
இந்த சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையானது சமீபத்திய வருடங்களில் 12000த்திலிருந்து 7000 என்பதாக குறைந்து காணப்படுகிறது. இதற்கு ‘புவி வெப்பமயமாதல்’ உட்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இருப்பினும் இந்த சரணாலயத்திற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்த வண்ணமே உள்ளது. பல வெளிநாட்டு, தூர தேச புலம்பெயர் பறவைகளை ஒரே இடத்தில் பார்த்து ரசிக்கும் அனுபவத்தை பெறுவதற்காக பறவை ரசிகர்கள் ஆர்வத்துடன் இந்த சரணாலயத்துக்கு விஜயம் செய்கின்றனர்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் இந்த ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளன. இனப்பெருக்க காலம் என்பதால் இம்மாதங்களில் ஏராளமான புலம்பெயர் பறவைகளை இங்கு பார்க்க முடியும்.