ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரமே இந்த மங்களகிரி. குண்டூர் மற்றும் விஜயவாடாவுக்கு அருகிலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் இந்த மங்களகிரி கிராமமும் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது.
மங்களகிரி எனும் பெயருக்கு புனிதமான மலை என்பது சொல்லாமலே விளங்கும். பெயருக்கேற்றபடி இந்த கிராமத்தில் பல கோயில்கள் நிறைந்து காணப்படுகின்றன. மற்றொரு சிறப்பம்சம் இங்கு தனித்தன்மையான நெசவுத்துணி வகைகள் கிடைப்பதாகும். மங்களகிரியில் தயாராகும் பருத்தி புடவைகள் தென்னிந்திய பெண்களிடையே விரும்பி அணியப்படும் ஒன்றாகும்.
இந்த நகரத்தில் புகழ் பெற்ற லட்சுமி ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகளும் பக்தர்களும் விஜயம் செய்கின்றனர். ஒரு மலையின்மீது இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் இந்த மலை ஒரு எரிமலையாக இருந்ததாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் வெல்லத்தை நைவேத்தியமாக அளித்து பூஜிக்கின்றனர்.
தென்னிந்திய யாத்ரீகர்களும் சுற்றுலாப்பயணிகளும் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய கோயில்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலின் கோபுர வடிவமைப்பு அக்கால கோயிற்கலைக்கு சான்றாக காட்சியளிப்பதுடன் வேறெங்குமே பார்க்க முடியாத அளவுக்கு சிக்கலான நுணுக்கமான கட்டுமான அமைப்புடன் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறது.