சௌமொஹல்லா பேலஸ் என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை ஹைதராபாத் நிஜாம் அரசர்களுக்கு சொந்தமானதாகும். இது ஆசஃப் ஜாஹிஸ் என்ற மன்னரின் இருப்பிடமாக விளங்கியிருக்கிறது.
நான்கு அரண்மனைகள் என்ற பொருளை குறிக்கும் ‘சஹார்‘ மற்றும் ‘மஹாலத்’ எனும் பர்ஷிய வார்த்தைகளிலிருந்து இந்த அரண்மனைக்கான பெயர் உருவாகியிருக்கிறது. இரான் நாட்டிலுள்ள ஷா மன்னரது அரண்மனை போன்று இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
18ம் நூற்றாண்டில் கட்டத்துவங்கப்பட்ட இந்த அரண்மனையை கட்டி முடிக்க 10 ஆண்டுகள் ஆகியுள்ளன. எனவே இது கலவையான கட்டிக்கலை அம்சங்களையும் அலங்கார வடிவமைப்புக்களையும் கொண்டுள்ளது.
அக்காலத்தில் இந்த அரண்மனை மாளிகையில் நிஜாம் குடும்பத்தினரது பல கொண்டாட்டங்களும் முடிசூட்டு விழாக்களும் நடைபெற்றுள்ளன. ஆங்கிலேய கவர்னர் ஜெனரல்களை வரவேற்று உபசரிக்கவும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.
சொல்லப்போனால் இந்த அரண்மனை கட்டப்பட்டபிறகு நிஜாம் மன்னர்களது எல்லா விசேஷ நிகழ்ச்சிகளுக்குமான மாளிகையாக இது திகழ்ந்துள்ளது. இரண்டு பெரிய முற்றங்கள் இந்த அரண்மனையின் உள்ளே அமைக்கப்பட்டுள்ளன.
இந்த முற்றங்களைச் சுற்றி வெகு நுணுக்கமான அலங்கார அம்சங்களை கொண்ட விசாலமான அறைகள் காணப்படுகின்றன. கம்பீரமும் கலையம்சமும் கலந்து ஜொலிக்கும் இந்த வரலாற்று கால அரண்மனை ஹைதராபாதில் அவசியம் பார்க்க வேண்டிய அம்சமாகும்.



Click it and Unblock the Notifications