ஹைதராபாத் நகரின் எல்லைப்பகுதியில் உள்ள ஒரு சுவாரசியமான அருங்காட்சியகம் இந்த சுரேந்திரபுரியாகும். புராண அம்சங்கள் குறித்த கல்வி மையம் என்ற பெயருடனும் இது குறிப்பிடப்படுகிறது.
இந்திய புராணிக அம்சங்கள் குறித்த தகவல்கள் மற்றும் மேன்மைகள் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. குண்டசத்யநாராயணன் என்பவர் தன் மகனான சுரேந்திராவின் பெயரில் இந்த அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ளார்.
தன் மகனின் பெயர் எதிர்காலத்திலும் நீடித்து அறியப்படவேண்டும் என்பது அந்த தந்தையின் நோக்கம். மிகவும் வித்தியாசமான ஒரு நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் இந்தியாவிலுள்ள மிகப்பிரசித்தமான முக்கியமான கோயில்களின் மாதிரி வடிவமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
கொஞ்சமும் வித்தியாசம் இல்லாமல் தத்ரூபமாக இவை கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ‘மாதிரி வடிவமைப்பு’களில் இருந்தே அந்தந்த கோயில்களின் கட்டிடக்கலை பாணி மற்றும் தனித்தன்மைகளை புரிந்து கொள்ளும் அளவுக்கு துல்லியமாக இவை படைக்கப்பட்டிருப்பது ஒரு அற்புதமான சாதனையாகும்.
ஹிந்து புராணங்களின் கடவுளர்கள் தொடர்பான சம்பவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ள சிற்பவடிப்புகள் மற்றும் ஓவியங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. செழுமையான ஹிந்து புராணிக பாரம்பரியம் குறித்த பல தகவல்களை இந்த மியூசியத்தில் நாம் தெரிந்துகொள்ளலாம்.