மரவந்தே வரும் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் அனிகுட்டே விநாயகர் ஆலயம். அனிகுட்டேயில் உள்ள 'அனி' யானையையும், 'குட்டே' குன்றையும் குறிக்கிறது. இது மரவந்தேவிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
துளுநாட்டின் சப்த ஷேத்ராவாக விளங்கும் இந்தக் கோயில் விநாயக பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இங்கு வருபவர்களுக்கு கண்டிப்பாக முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் இதற்கு முக்தி ஸ்தலம் என்ற சிறப்புப் பெயரும் உள்ளது.
அனிகுட்டே விநாயகர் சிலை நான்கு கரங்களை கொண்டது. மேலே உயர்ந்து காணப்படும் கைகள் வரங்களை வழங்குவதாகவும், கீழே உள்ள கைகள் முக்தி அளிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இங்கு விநாயகர் சதுர்த்தியும், சங்கடஹர சதுர்த்தியும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது புனித யாத்ரிகர்களால் துலாபாரம் போன்ற சடங்கு முறைகளும் நிறைவேற்றப்படும். அதே போல் தேர் திருவிழாவும் சிறப்பாக கொண்டாடப்படும்.



Click it and Unblock the Notifications