மெல்லசெருவு எனும் இந்த கிராமம் நல்கொண்டா மாவட்டத்தில் நல்கொண்டா நகரத்துக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது. இந்த கிராமம் ஒரு ஓடையின் மூலம் விஜயவாடா நகரத்துடன் இணைக்கப்பட்டிருப்பது ஒரு சுவாரசியமான அம்சமாகும்.
வரலாற்று ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான இக்கிராமத்தில் காகதீய அரசர்கள் கட்டிய பல கட்டிடக்கலை சின்னங்கள் காணப்படுகின்றன. பல கோயில்கள் இந்த மெல்லசெருவு கிராமத்தில் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சுயம்பு ஜம்புலிங்கேஸ்வர ஸ்வாமி கோயில் குறிப்பிடத்தக்கதாகும். ஒரு தனித்தன்மையான அதிசயமாக இக்கோயிலின் சிவலிங்கம் கோயிலின் உச்சியில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
லிங்கத்தில் உள்ள 2 அங்குல துவாரத்தில் எப்போதுமே நீர் நிறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கோயிலின் சிறப்பு காரணமாக இந்த மெல்லசெருவு கிராமம் ‘தென்னாட்டு வாரணாசி’ என்ற சிறப்புப்பெயரையும் பெற்றுள்ளது. இந்த கோயிலின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டு வருவதாகவும் ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது.