இந்தியாவின் முதன்முதல் புல்லட் ரயில் சேவைக்கான பணிகள் 2017 இல் துவங்கப்பட்டு, மும்பை-அகமதாபாத் இடையே பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இவற்றில், நீருக்கடியில் செல்லும் சுரங்கப்பாதை, 175,000 இரைச்சல் தடுப்புகள், 700 மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் தோண்டும் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது இந்தியாவில் புதிதாக அமைக்கப்படும் புல்லட் ரயில் சேவைகளின் பாதைகளை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது! அதில் சுவாரஸ்யமாக சென்னை-பெங்களூரு-மைசூர் புல்லட் ரயிலும் சேருகிறது என்பது ஒரு இன்ப அதிர்ச்சி!

மாநிலங்களவையில் எழுந்த கேள்வி
நாட்டில் போக்குவரத்துச் சேவைகளை வலுப்படுத்த அதிவேக ரயில்களை இயக்குவதற்கு ஏதேனும் புதிய இரயில்வே திட்டத்தை அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்துள்ளதா, நாட்டில் அதிவேக ரயில்களை இயக்குவதற்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டுள்ள பாதைகளின் எண்ணிக்கை, மேலும் எந்தெந்த புதிய பாதைகளில் புல்லட் ரயில் இயக்கப்படும் என திருமதி. கீதா அலியாஸ் சந்திரபிரபா மற்றும் திரு. கீதா அலியாஸ் சந்திரபிரபா மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினர்.

புதிய புல்லட் ரயில் பாதைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இதற்கு பதிலளித்த இந்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தற்போது, மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் (எம்ஏஎச்எஸ்ஆர்) திட்டம் (508 கிமீ) என்பது ஜப்பான் அரசாங்கத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்தியாவின் ஒரே அதிவேக இரயில் திட்டமாகும். இது தவிர கீழ்க்கண்ட பாதைகளில் புதிய புல்லட் ரயில் சேவை துவங்கும் என்றும் குறிப்பிட்டார்:
1. டெல்லி - வாரணாசி
2. டெல்லி - அகமதாபாத்
3. டெல்லி - அமிர்தசரஸ்
4. மும்பை - நாக்பூர்
5. மும்பை - புனே - ஹைதராபாத்
6. சென்னை - பெங்களூர் - மைசூர்
7. வாரணாசி - ஹவுரா
இந்த பட்டியலில் இடம் பெற்ற ஒரே தென்னிந்திய பாதை சென்னை - பெங்களூர் - மைசூர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய புல்லட் ரயில்
அகமதாபாத் மற்றும் மும்பை இடையே அதிவேக இரயில் (HSR) பாதையில் 320 கிமீ வேகத்தில் புல்லட் ரயிலை இயக்கும் திட்டம், 508 கிமீ தூரம் மற்றும் 12 நிலையங்களில் நின்று செல்லும். இரண்டு நகரங்களுக்கு இடையேயான தற்போதைய ஆறு மணி நேர பயணத்தை பாதியாக, தோராயமாக மூன்று மணி நேரமாக ரயில்வே குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மதிப்பிடப்பட்ட 1.1 லட்சம் கோடி செலவிற்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகாம் 81% நிதியளிக்க தயாராக உள்ளது.

முதல் புல்லட் ரயில் சேவை எந்த அளவில் உள்ளது
மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் சேவைக்கான பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இவற்றில் புல்லட் ரயில் நிலையங்கள் அமைப்பது, சுரங்கங்கள் அமைப்பது, பாலம் கட்டும் பணிகள் ஆகியவை விரைவாக முடிந்துள்ளது. தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் பாதையில் ஒலி தடைகளை நிறுவ திட்டமிட்டு, 87.5 கிலோமீட்டர் நீளத்தில் ஏற்கனவே 175,000 இரைச்சல் தடுப்புகளை நிறுவியுள்ளது. இந்தியா தனது முதல் புல்லட் ரயிலான மும்பை-அகமதாபாத் வழித்தடத்திற்கு அரபிக்கடலுக்கு அடியில் 21 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதையை அமைப்பதன் மூலம் உலகளாவிய பொறியியலில் மற்றொரு முத்திரையைப் பதித்துள்ளது.
சென்னை-பெங்களூரு-மைசூர் புல்லட் ரயில்
இனி நீங்கள் சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு புல்லட் ரயில் மூலம் சட்டென்று பயணம் செய்திடலாம். மைசூரு-பெங்களூரு-சென்னையை இணைக்கும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அதிவேக ரயில் பாதை அதன் முதல் அனுமதியைப் பெற்றுள்ளது, இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்ப்படுகிறது, நீங்கள் இந்தப் பாதையில் பயணிக்கும் போது வெறும் இரண்டு மணி நேரத்தில் பெங்களூருவை அடைந்திடலாம்.
சென்னை to பெங்களூரு வெறும் 2 மணி நேரத்தில்
சென்னையிலிருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வேலை, கல்வி, சுற்றுலா நிமித்தமாக பிரயாணம் செய்கின்றனர். இரண்டு ஊர்களுக்கும் இடையே இருக்கும் இடைப்பட்ட தூரத்தைக் கடக்க ரயில் என்றால் அதிகபட்சம் 5 மணி நேரமும், பேருந்து என்றால் அதிகபட்சம் 7 மணி நேரமும் ஆகிறது. ஆனால் இனி அப்படி ஆக போவது இல்லை! ஆம்! சென்னையிலிருந்து பெங்களூருவை 2 மணி நேரத்தில் அடையும் வகையில் புதிய அரை அதிவேகப் பாதையை தொடங்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
விரைவில் பணிகள் தொடங்கும்
மைசூர்-பெங்களூரு-சென்னை பகுதி அதிக அடர்த்தி கொண்ட வழித்தடமாகும், இது மக்கள் மத்தியில் மட்டுமல்ல, வணிக வர்க்கத்தினரிடையேயும் பிரபலமானது. பெங்களூரு மற்றும் மைசூரு இடையிலான பயண நேரத்தை 45-60 நிமிடங்களாக குறைப்பதே இதன் நோக்கம். தென்னிந்தியா முழுவதும் உத்தேச அதிவேக ரயில் வெட்டு நாட்டிற்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது, மேலும் அதை மைசூரில் இருந்து மங்களூரு வரை நீட்டிக்க நம்பிக்கை உள்ளது. ஆறுகள், கால்வாய்கள், பாலங்கள், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளைக் கடக்கும் பகுதிகளுக்கு விரிவான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications






