மார்கழி மாதத்தில் திறக்கப்படும் சொர்க்க வாசல் நிகழ்வானது இந்து சமய தெய்வீக நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானது. இன்றைய தினத்தில், பெருமாள் கோயில்களுக்கு சென்று சொர்க்க வாசல் நிகழ்வை காண்பது என்பது மிகவும் விசேஷத்துக்கு உரியது. அதுவும் உலகப்பிரசித்தி பெற்ற திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சொர்க்க வாசல் வழியாக, அந்த திருவேங்கடமுடையானை தரிசிப்பது என்றால் சொல்லவா வேண்டும்! இந்த 10 நாட்கள் தரிசனத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்த நிலையில், இதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் இடங்களை TTD தேவஸ்தானம் அறிவித்துள்ளது!
விற்றுத் தீர்ந்த சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்
திருமலையில் இலவச தரிசனம், கட்டண தரிசனம் என்று இரு முறைகளில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வைகுண்ட ஏகாதசி என்பது இந்துக்கள் மத்தியில் மிக முக்கியமான விழாக்களில் ஒன்றாகும். இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வைகுண்ட ஏகாதசி 2025 சிறப்பு தரிசன நுழைவுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு திறக்கப்பட்டு முடிவடைந்துள்ளது.
ஜனவரி 10 முதல் 19 வரை வைகுண்ட தரிசனம்
ஜனவரி 10 முதல் 19 வரை சுமார் ஏழு லட்சம் பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் செய்வதற்கான விரிவான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) செயல் அதிகாரி ஜே. ஷியாமளா ராவ் அறிவித்தார். ஸ்ரீவாரி கோயிலில் உள்ள வைகுண்ட துவாரம் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு திறந்திருக்கும். கைங்கர்யால சடங்குகளைத் தொடர்ந்து நெறிமுறை தரிசனம் அதிகாலை 4:30 மணிக்கு தொடங்கும், காலை 8 மணிக்கு சர்வ தரிசனம் தொடங்குகிறது.
தங்க ரதத்தில் எழுந்தருளும் மலையப்ப ஸ்வாமி
ஜனவரி 10 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை கோயிலின் நான்கு மாட வீதிகளில் தங்க ரதத்தில் மலையப்ப ஸ்வாமி காட்சியளிப்பார். பின்னர் பகல் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரைக்கும் வாகன மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். வைகுண்ட துவாதசியை முன்னிட்டு ஜனவரி 11 ஆம் தேதி காலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை சக்ரஸ்நானம் நிகழ்ச்சி நடைபெறும்.

CRO ஆபிசில் அறைகள் வாங்கிக் கொள்ளலாம்
ஜனவரி 13 முதல் 19 வரை ஸ்ரீனிவாசம், விஷ்ணு நிவாசம் மற்றும் பூதேவி வளாகத்தில் ஒரே நாளில் தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். கூடுதலாக, 10 நாள் நிகழ்ச்சிக்காக 1.4 லட்சம் சிறப்பு நுழைவு தரிசனம் (SED) டிக்கெட்டுகள் மற்றும் 19,500 ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன. யாத்ரீகர்களின் வருகையை நிர்வகிப்பதற்காக, தங்கும் இடங்களுக்கான ஆன்லைன் முன்பதிவு 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செல்லுபடியாகும் தரிசன டோக்கன்களைக் கொண்ட பக்தர்களுக்கு மத்திய வரவேற்பு அலுவலகம் (CRO) மூலம் அறைகள் ஒதுக்கப்படும்.
அனைத்து விவரங்களும் டிக்கெட்டுகளில்
விஐபி பிரேக் தரிசனம், மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகள் உள்ள பெற்றோர்கள், என்ஆர்ஐக்கள் மற்றும் உடல் ஊனமுற்ற பக்தர்கள் உட்பட அனைத்து சிறப்பு தரிசனங்களும் 10 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன, புரோட்டோகால் விஐபிகள் தவிர. MBC, அவுட்டர் ரிங் ரோடு, RBGH, மற்றும் பரகாமணி பவன் ஆகிய இடங்களில் 12,000 வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நுழைவுப் புள்ளிகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் பக்தர்களுக்கு உதவி செய்யும் இடங்களின் விவரங்கள் டிக்கெட்டுகளில் இருக்கும்.

எந்தெந்த இடங்களில் இலவச தரிசன டிக்கெட் கிடைக்கும்
1. MR பள்ளி
2. ஜீவகோனா
3. ராம நாயுடு ஸ்கூல்
4. ராமச்சந்திர புஷ்கரணி
5. இந்திரா மைதான்
6. ஸ்ரீநிவாசம் காம்ப்ளக்ஸ்
7. விஷ்ணுநிவாசம் காம்ப்ளக்ஸ்
8. பூதேவி காம்ப்ளக்ஸ்
9. கௌஸ்துபம் கெஸ்ட் ஹவுஸ்
சரியான நேரத்தில் வருகை தரவும்
திருப்பதியில் 1,200, திருமலையில் 1,800 என 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திருப்பதி மாவட்ட எஸ்பி சுப்பராய்டு அறிவித்துள்ளார். TTDயின் ஒருங்கிணைப்பில் அனைத்து டோக்கன் வழங்கும் மையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நெரிசலைத் தவிர்க்க பக்தர்கள் தங்கள் டோக்கன்களில் திட்டமிடப்பட்ட தேதி மற்றும் நேரத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



Click it and Unblock the Notifications







