‘செயிண்ட் ஜான் ஆங்கிலிகன் சர்ச்’ என்றும் அழைக்கப்படும்இந்த இங்கிலீஷ் சர்ச் தலச்சேரி நகரில் பிரசித்தமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. 140 வருடங்கள் பழமையை உடைய இந்த தேவாலயம் மலபார் பகுதியில் முதல் முதலாக உருவானவற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
தலச்சேரி கோட்டைக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த தேவாலயம் அமைந்திருக்கும் ஸ்தலமானது எழில் நிறைந்த இயற்கைக் காட்சிகளையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சர்ச்சுக்கு அருகில் மலபார் காலனிய ஆட்சியாளர்கள் புதைக்கப்பட்டிருக்கும் ஒரு கல்லறை ஸ்தலமும் உள்ளது. ‘எட்வர்ட் ப்ரென்னன்’ எனும் ஆங்கிலிகன் வள்ளல் ஒருவரது சமாதி இங்கு வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் பிரசித்தமாக அறியப்படுகிறது. இவர் தன் செல்வத்தையெல்லாம் தலச்சேரி பகுதியின் முன்னேற்றத்துக்கு செலவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த தேவாலயத்தின் வடிவமைப்பு, புராதனப்பழமை, கம்பீரம் போன்ற தனித்தன்மையான அம்சங்கள் பயணிகளை கவர்ந்து இழுக்கின்றன. லண்டனிலிருந்து தருவிக்கப்பட்ட பல அழகான கண்ணாடி அலங்கார வடிவமைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. தொல்லியல் துறையினரால் புதுப்பிப்பு செய்யப்பட்டுள்ள இந்த பழமையான தேவாலயம் தற்போது பார்வையாளர்களுக்கு திறந்து விடப்படுகிறது.