ஓடத்தில் பள்ளி என்றழைக்கப்படும் இந்த இஸ்லாமிய மசூதி 200 வருடங்கள் பழமை வாய்ந்த ஆன்மீக வழிபாட்டு கூடமாகும். மலபார் பகுதியின் எல்லாத் திசைகளிலிருந்தும் பக்தர்களை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுலாப்பயணிகள் மத்தியிலும் இந்த மசூதி புகழ் பெற்றுள்ளது.
19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியாரிடம் ஒப்பந்தக்காரராக பணியாற்றிய்ய் மூசாகக்கா என்பவரால் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது. பாரம்பரிய கேரள பாணியில் இந்த மசூதி கட்டப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
அது மட்டுமல்லாமல் செப்புக்கூரைகள் வேயப்பட்டு தங்கத்தால் ஆன கலசத்தை கொண்டிருக்கும் இந்த மசூதியில் காணப்படுவது பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறது. இந்த மசூதியின் மினார் அமைப்பு வெகு தூரத்திலிருந்தும் தெரியும்படியாக உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஓடத்தில் பள்ளி மசூதி அமைந்திருக்கும் இடமானது டச்சுக்காரர்கள் கரும்பு பயிரிட்டிருந்த வயற்பகுதியாக இருந்திருக்கிறது. எனவே இது கரும்பை குறிக்கும் ‘ஒடம்’எனும் டச்சு வார்த்தையையும், மசூதியை குறிக்கும் பள்ளி எனும் மலையாள வார்த்தையையும் சேர்த்து ஒடத்தில் பள்ளி என்று அழைக்கப்படுகிறது.