உங்களுடைய விடுமுறை பயணத்தை சந்தோஷமாக கழிக்க ஆசைக்கொள்ளும் நீங்கள், பயண சீட்டை பதியும் முன்னே வேறு வழியில் எப்படி உங்கள் பயணத்தை இனிமையாக கொண்டு செல்வது என யோசிக்க வேண்டியது அவசியமாகும். ஆம், வழக்கம்போல் அந்த சுற்றுலா பயணமானது அல்லாமல், வித்தியாசமான மனதினை குளிர்ச்சி அடைய செய்யக்கூடும் இடங்களை தேடி ஓய்வாற அமர்வது அருமையானதோர் உணர்வினை நம் மனதில் தருகிறது. எப்படி இப்பேற்ப்பட்ட புது இடத்தில் நாம் புதுவித அனுபவத்தை அடைவது?
இப்படிப்பட்ட இடங்கள் இந்தியாவில் காணப்பட, அவை நம் மனதில் சந்தோஷத்தை தந்து, புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் உதவுகிறது என்பதனை தெரிந்துக்கொள்ளும் நம் மனம் ஆச்சரியத்தின் எல்லையில் அளவற்ற மகிழ்ச்சியோடு பயணிக்கிறது. கோகர்னாவில் அல்லது ஜெய்ப்பூரின் மட்பாண்டத்தை பார்க்கும் நம் மனம், வாழ்க்கையில் இதுபோலொரு இன்பத்தை வேறேதும் தந்திடுமோ என்னும் எண்ணத்தை மனதில் உருவாக்குகிறது. அதுமட்டுமல்லாமல், அழகிய காட்சிகளை நம் மனதில் பதிய செய்யும் இவ்விடங்கள், புதியவனவற்றையும் நாம் கற்றுக்கொள்ள பெரிதும் உதவுகிறது.
அப்பேற்ப்பட்ட இடங்களுள் ஒன்றிற்கு நாம் செல்லவேண்டுமென ஆசைக்கொள்ள அதற்கான பட்டியல் இதோ என நாங்களும் தர முன்வருகிறோம்.
பனிச்சறுக்குக்கு அழைக்கும் குல்மார்ஹ்:
நம் நாட்டில் காணப்படும் பெருமூச்செறிந்து பார்க்க வைக்கும் புகழ்பெற்ற இடமான, குல்மார்ஹ் பள்ளத்தாக்கு பனிச்சறுக்கு சாகசக்கலைக்கு ஏற்ற இடமாக அமைந்திருக்கிறது. இந்த சாகச விளையாட்டு சுவிஸ் ஆல்ப்ஸில் உருவாக, தனக்கென திகழும் மாபெரும் இமயமலையுடனும் செல்கிறது. இந்த இடத்தில் நிறைய குழுக்கள் காணப்பட, விபத்து பற்றிய முன்னெச்சரிக்கை பாடங்கள் எடுக்கப்பட அது ஒரு வாரம் நடைபெறுவதோடு, பனிச்சறுக்கிற்கும் நம்மை தயார் நிலையில் வைக்க உதவுகிறது.
மலையை பனிகள் சூழ்ந்திருக்க, இங்கே பனியில் சறுக்குவதென்பது அனைவருக்கும் உகந்ததாக அமைவதுமில்லை. நீங்கள் செல்லும் வழியானது அதிர்ஷ்ட வசமாக இருந்தால், பனிச்சறுக்கு உபகரணங்கள் உதவியுடன் நாம் செல்லலாம். இல்லையென்றால், கண்டிப்பாக செல்வதை தவிர்க்கவும்.
jfpds regular
ஜெய்ப்பூரின் மட்பாண்டங்கள்:
‘பிங்க் சிட்டி' என்றழைக்கப்படும் ஜெய்ப்பூர், கைவினைப்பொருட்களுக்கு பெயர் பெற்று விளங்க, கையால் செய்யப்பட்ட பாத்திரங்கள் இங்கே பாரம்பரியத்தின் ஆணி வேராய் ஊன்றி நிற்கிறது. இந்த அழகிய நகரத்தில், மட்பாண்டங்களின் செய்முறை விளக்கங்களும் விரைவில் நமக்கு கற்றுத்தரப்பட, இங்கே சுவைமிக்க ராஜஸ்தானி உணவு வகைகள் நம் நாவை உச்சுக்கொட்ட வைக்கிறது.
இந்த பயிற்சிகள் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஆவதுமில்லை என்பதால். இதனை பயன்படுத்திக்கொள்ளும் பலர், ஆர்வத்துடன் சில அழகிய மட்பாண்டங்கள் முறையினை கற்று மனதார செல்கின்றனர்.
Unknown
அந்தமானின் ஆழ்கடல் நீச்சல்
மிகவும் பயம் தரக்கூடிய ஆழ்கடல் நீச்சல், அச்சுறுத்தலையும் தர இருப்பினும் பயம் அறியா சிங்கம் போல் நாம் கடலில் குதிக்கிறோம். இந்த சாகசத்திற்கு திறமையும், சாதனையும் கைக்கொடுக்க, இவை இரண்டையும் சந்திக்கவும் வைக்கிறது இவ்விடம். உங்கள் ஆற்றலால், அசையா நிழற்படங்கலான இலட்சியத்தையும் அடையவைத்து உங்களையும் ஒரு பிரபலமாக ஆக்குகிறது. அந்தமான் நிகோபர் தீவின் அழகிய காட்சிகளால் உள்ளே குதிக்கும் நாம், கடலுக்கடியில் பலவித புது தோழர்களையும் சந்திக்கிறோம்.
Unknown
கோகர்னாவில் ஓர் உலாவல்:
அயல் நாட்டு தேசத்தவரால் இந்தியாவில் கொண்டுவரப்பட்ட மற்றுமோர் விளையாட்டு தான் உலாவல். இவ்விளையாட்டு மிகவும் பிரசித்திபெற்று காணப்பட, கோகர்னா தான் சிறந்த இலக்காகவும் அதே சமயத்தில் காணப்படுகிறது. உலாவல் பயிற்சி வகுப்புகளும் காணப்பட, நன்கு கற்றுத்தேர்ந்த கடல் அலை விளையாட்டு ஆசானால் இது கற்றுத்தரப்படுகிறது. மேலும், இங்கே கடற்கரையில் குளிர்ந்த காற்றினை நாம் சுவாசிக்க, இதழ் நீருடன் கடல் உணவின் சுவையும் சந்தோஷத்தை மனதில் தருகிறது.
Kanenori
இமாச்சலில் இரண்டு கயிர்கள் கொண்டு செங்குத்தான மலை மீது ஏறுதல்:
நாடு முழுவதும் ஒவ்வொரு நகரமும், ரேப்பெல்லிங்க் என்ற ஒன்றிற்கு கூடாரம் அமைத்து செயல்பட, இந்த விளையாட்டை நாம் கற்றுக்கொள்வதன் மூலம் உண்மையானதோர் அனுபவத்தை அடைகிறோம். இரண்டாவது மனப்பான்மை கொள்ளாமல் நேராக இமயமலை மீது நாம் ஏறவும் நினைக்கிறோம். இங்கே முசோரியில் நிறைய மலையேறுதல் பள்ளி காணப்பட, பாறை ஏறுதல், ரேப்பெல்லிங்க், மீட்பு நடவடிக்கைகள், என பல ஆச்சரியமூட்டும் விளையாட்டுகளுக்கான பயிற்சி இங்கே வழங்கப்படுகிறது. இந்த பயிற்சிகள் நான்கு நாட்கள் நடக்க, இவை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்றதாகவும் அமைகிறது.
Unknown
கேரளாவின் களரிச்சண்டை
பாரம்பரியமிக்க தற்காப்பு கலை தான் இந்த கலரிச்சண்டை என்பதோடு கடவுளின் இடமான கேரளாவில் இது பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கலை வடிவம், பழமையான மற்றும் இயற்கையோடு இணைந்த அறிவியல் சார்ந்த கலையாகவும் உலகிலேயே கருதப்படுகிறது. இந்த கலை வடிவமானது, நம்முடைய தற்காப்பு திறனை வலிமைப்படுத்தி பலத்தை நிரூபிக்க உதவுகிறது. இந்த கலைக்கான பயிற்சியானது, பாரம்பரிய பயிற்சி பள்ளியின் மூலம் கற்பிக்கப்பட அதன் பெயர் ‘கலரி' என்றும் நமக்கு தெரியவருகிறது.
Unknown