Search
  • Follow NativePlanet
Share
» » உங்க சம்மர் ட்ரிப் க்கு பெஸ்ட் சாய்ஸ் இதுதான் தெரியுமா?

உங்க சம்மர் ட்ரிப் க்கு பெஸ்ட் சாய்ஸ் இதுதான் தெரியுமா?

உங்க சம்மர் ட்ரிப் க்கு பெஸ்ட் சாய்ஸ் இதுதான் தெரியுமா?

By Bala Latha

பெங்களூருவிலிருந்து சிக்மகளூருக்கு 242.5 கிலோ மீட்டர் உள்ள தூரத்தை அடைய சுமார் 5 மணி நேரம் ஆகிறது. நம்மில் பெரும்பாலானோர் இந்த இடத்தில் வழிநெடுகிலும் உள்ள இயற்கைக் காட்சிகளைப் பார்ப்பதற்காக சாலை வழியில் பயணிப்பதையே தேர்ந்தெடுக்கிறோம். சிக்மகளூர் கர்நாடகாவிலுள்ள கண்ணைக் கவரும் மற்றும் மனதை மயக்கும் சுற்றுலா பயண இலக்குகளில் ஒன்றாகும். 3,400 அடி உயரத்தில் அமைந்துள்ள சிக்மகளூர் மிக உயர்ந்த மலை வாசஸ்தலமாகும். மற்றும் அங்கே சுற்றிப் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. அது காஃபி தோட்டங்கள் மற்றும் சாதகமான பருவ நிலைக்கு பிரசித்திப் பெற்றதாகும். சிக்மகளூர் அதன் பெயரை "சிக்க மகள ஊரு" என்ற வாக்கியத்திலிருந்து பெற்றது. இந்த மொழிப் பெயர்ப்புக்கு "இளைய மகளின் நகரம்" என்பது பொருளாகும்.

 உங்க சம்மர் ட்ரிப் க்கு பெஸ்ட் சாய்ஸ் இதுதான் தெரியுமா?

சக்ரயபட்டணாவின் தலைவர் ருக்மாங்கதாவின் இளைய மகளுக்கு வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டதால் இந்தப் பெயரைப் பெற்றது என்று சொல்லப்படுகிறது. இந்த நேர்த்தியான இயற்கைக் காட்சிகள் நிறைந்த சுற்றிப் பார்க்கும் இடம் பாரம்பரிய அமைவிடங்கள் மற்றும் வனவிலங்கு மற்றும் இயற்கை ஆய்வுப் பொருட்களுடன் கூடிய சாகசத் தேர்வுகளுடன் முக்கியத்துவம் பெறுகிறது.

தொடக்கப்புள்ளி: பெங்களூர்.

பயண இலக்கு: சிக்மகளூர்.

வருகைத் தர சிறந்த காலம்: செப்டம்பர் மற்றும் மார்ச்சுக்கு இடைப்பட்ட காலம்.

சிக்மகளூரை அடைவது எப்படி:

வான்வழியாக: சிக்மகளூருக்கு அருகாமையிலுள்ள விமான நிலையம், 113 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மங்களூர் விமான நிலையம் ஆகும். நீங்கள் பெங்களூருவிலிருந்து மங்களூருக்கு ஒரு விமானத்தில் வந்து, பிறகு அங்கிருந்து சிக்மகளூரை அடைய ஒரு முன்கூட்டிப் பணம் செலுத்தும் டாக்ஸியை எடுத்துக் கொள்ளலாம்.
இரயில் வழியாக: சிக்மகளூரில் ரயில் நிலையம் இல்லை. மிக அருகாமையில் உள்ள இரயில் நிலையம் கடூர் இரயில் நிலையம் ஆகும். அது சிக்மகளூருவிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சாலை வழியாக: பெங்களூருவிலிருந்து சிக்மகளூருக்கு நிறைய தனியார் மற்றும் அரசாங்கப் பேருந்துகள் ஓடுகின்றன. எனினும் நீங்கள் ஒரு சாலை வழிப் பயணத்தை மேற்கொள்பவராக இருந்தால் அங்கே 3 வழிப் பாதைகள் உள்ளன. பெங்களூருவிலிருந்து சிக்மகளூருக்கு வாகன ஓட்ட தூரம் தோராயமாக 250 கிலோ மீட்டர் ஆகும்.

பாதை வழி 1: பெங்களூர் - குணிகல் - சென்னராயப்பட்டணா - ஹசன் - போளூர் - சிக்மகளூர். தேசிய நெடுஞ்சாலை 75 ன் மீது.

பாதை வழி 2: பெங்களூர் - குணிகல் - திப்டூர் - அர்சிகோரி - ஹளபிடு - சிக்மகளூர். தேசிய நெடுஞ்சாலை 75 மற்றும் 73 ன் மீது.

பாதை வழி 3: பெங்களூர் - டும்கூர் - ஹிரியூர் - ஹொசதுர்கா - கடூர் - சிக்மகளூர். தேசிய நெடுஞ்சாலை 48 ன் மீது.

பாதை வழிகள்

பாதை வழிகள்

பாதை வழி 1 தூரம் மற்றும் கால வரையறையில் குறுகியதாகும். இது சுமார் 4.5 மணி நேரங்களை எடுத்துக் கொள்கிறது. மற்றும் மிக அழகிய ஹசன் நகரம் மற்றும் வரலாற்று நகரமான பேளூர் ஆகியவற்றின் வழியாக உங்களை அழைத்துச் செல்கிறது. சாலைகள் மிகச் சிறப்பாக உள்ளன. அது உங்களுக்கு ஒரு அற்புதமான வாகனப் பயணத்தைப் பரிசளிக்கிறது. எனினும், சில நேரங்களில் சாலை விரிவாக்கம் மற்றும் பழுதுப்பார்க்கும் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாத்தியங்கள் இருப்பதால் பயணத்திற்கு திட்டமிடும்போது இந்தக் காரணிகளை மனதில் கொள்வது பாதுகாப்பானது மற்றும் பரிந்துரைக்கத் தக்கது.
பாதை வழி 2 ஐ தேர்ந்தெடுக்க திட்டமிடுபவர்களுக்கு அது கிட்டதட்ட 5 மணி நேரத்தை எடுத்துக் கொள்ளும். இந்த வழிப் புகழ்பெற்ற இரட்டை நகரங்களான பேளூர் மற்றும் ஹளபிடு வழியாகக் கடக்கிறது.

பாதை வழி 3 தூரம் மற்றும் நேர வரையறையில் மிகவும் நீளமானதாகும். நீங்கள் தேசிய நெடுஞ்சாலை 48 ஐ தேர்ந்தெடுத்தால் சிக்மகளூரை அடைய சுமார் 6 மணி நேரம் எடுக்கிறது. தரிசு நிலச் சுற்றுச்சூழல்களிலிருந்து இரு பக்கமும் மிகப் பெருமளவில் பச்சைப் பசேல் என்ற இயற்கைக் காட்சிகளின் மாற்றத்தை கண்டுகளிப்பது, பெங்களூருவிலிருந்து சிக்மகளூருக்கு செல்லும் சாலைவழிப் பயணத்தில் ஒரு ஆடம்பரமான அனுபவமாகும்.

பத்திரிகையாளர் மரியாதை: wikimedia.org

சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்ற இடங்கள்

சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்ற இடங்கள்

சிக்மகளூலிருந்து அதற்கு செல்லும் வழி நெடுகிலும் முற்றிலும் சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்ற சில இடங்கள் உள்ளன. நீங்கள் சுற்றிபார்க்கும் இடங்களைப் பொறுத்து ஒரு வார இறுதியிலோ அல்லது நீண்ட வார இறுதியிலோ இந்தப் பயணத்தைத் திட்டமிடுவது சிறந்தது. நீங்கள் குணிகலில் நிறுத்தி பேகூர் ஏரியை கண்டுகளித்து மகிழலாம்.
செல்லும் வழியில் அடிச்சுன்கிரி என்ற ஒக்கலிகா சமூகத்தினரின் மத சார்பான மற்றும் ஆன்மீக தலைமையகம் உள்ளது. நீங்கள் ஒரு மாற்று சுற்றுப்பாதை வழியைத் தேர்ந்தெடுத்தால், சில மைல் தொலைவிலேயே ஷரவணபெளகொலா உள்ளது. கோமதீஸ்வரா சிலை ஜைனத்துவத்தின் மிக முக்கியமான தீர்த்தங்களில் ஒன்றாகும்.
ஹேமாவதி நதியின் மீதுள்ள கோரூர் அணைக்கு நீங்கள் வருகைத் தரலாம். அது ஹாசனிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஹாசனிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற மூழ்கும் கிறிஸ்த்துவ தேவாலயம் அமைந்துள்ளது. இது மழைக்காலங்களில் நீருக்கடியில் மூழ்கியிருக்கிறது. மழை நின்றவுடன் மீண்டும் மேற்பரப்புக்கு வருகிறது.

பத்திரிகையாளர் மரியாதை: wikimedia.org

பெங்களூரிலிருந்து சிக்மகளூரு

பெங்களூரிலிருந்து சிக்மகளூரு

பெங்களூரிலிருந்து சிக்மகளூருக்கு வாகனம் ஓட்டும்போது பேளூர் மற்றும் ஹளபிடின் சுற்றுப்பாதை குறுகிய மாற்று வழிப்பாதை ஆகும். இங்குள்ள கோயில்கள் 11 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரையில் ஹொய்சாலா மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டுமானிக்கப்பட்டவையாகும். அந்தக் காலகட்டத்தில் 92 கோயில்கள் கட்டப்பட்டிருந்த போதிலும் வெறும் 3 மட்டுமே அதாவது, சோமநாத்புரா, பேளூர் மற்றும் ஹளபிடு ஆகியவை மட்டுமே இன்றைய தேதியில் செழிப்படைந்துள்ளது.
மேலும் படியுங்கள்: பேளூரிலுள்ள சென்னக்கேஷவா கோயிலின் மூலத்தோற்றம்.

ஹொய்சாலா கட்டிடக்கலை நுட்பங்களை உங்களுக்கு விளக்குவதற்கு ஒரு வழிகாட்டியின் சேவைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டதை உறுதி செய்யுங்கள். நீங்கள் வழியில் யாகச்சி அணையில் நிறுத்தி வாழைப்பழ படகு சவாரியிலும் ஈடுபடலாம்.
சிக்மகளூரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்.
முல்லையங்கிரி மலைத்தொடர், சிக்மகளூர்
பரிந்துரைக்கப்படுகிறது.

முல்லையங்கிரி மலை

முல்லையங்கிரி மலை

நேரம் அனுமதித்தால் சிக்மகளூர் வழியே கடக்கும் பயணிகள் கர்நாடகாவின் மிக உயர்ந்த சிகரமான முல்லையங்கிரி மலைத் தொடரை கண்டிப்பாக சுற்றி பார்க்க வேண்டும். இந்த மலைத்தொடர் மேற்கு மலைத் தொடர்களில் உள்ள பாபா புதான் கிரியில் உள்ளது.

முல்லையங்கிரி மலைத்தொடர் கடல் மட்டத்திற்கு மேலே 1930 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஹிமாலயாவிலிருந்து நீலகிரி வரையில் முல்லையங்கிரி மிக உயரமான சிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது செம்பரா, பனௌரா மற்றும் வெல்லரிமாலா சிகரங்களுக்கு பின்னால் உள்ளது. இந்த இடத்தில் தட்பவெப்ப நிலை 200 செல்சியசிலிருந்து 250 செல்சியஸ் வரை வீச்செல்லை உள்ளது.

முல்லையங்கிரி மலைத் தொடரின் உச்சியை அடைவதற்கு பயணிகள் சர்பதாரியிலிருந்து மலையேற்றத்தைத் தொடங்கலாம். உச்சியை அடைந்தவுடன் சுற்றுலாப் பயணிகள், இறைவன் சிவனுக்கு அர்பணிக்கப்பட்டுள்ள ஒரு கோயிலைத் தரிசிக்கலாம். மலையேற்றத்தைத் தவிர மக்கள் சாகசங்களை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளான சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டுதல் மற்றும் மலையின் மீது இரு சக்கர வாகனம் ஓட்டுதல் போன்றவற்றை மேற் கொள்ளலாம்.

பத்திரிகையாளர் மரியாதை: wiki

பாபா புதான் கிரி.

பாபா புதான் கிரி.


இந்த சிகரம் சிக்மகளூரிலுள்ள சுற்றுலாப் பயணிகளின் மற்றொரு விருப்பத்திற்குரிய இடமாகும். இது 150 வருடங்களுக்கும் முன்னதாக இந்தப் பகுதியில் வாழ்ந்த பாபா புதான் என்கிற இஸ்லாமிய துறவியின் நினைவாக இந்தப் பெயரைப் பெற்றது. மேலும் பாபா புதான் மெக்காவிலிருந்து திரும்பி வரும்போது 7 காஃபி விதைகளை தனது அறைக்கச்சில் இரகசியமாக பதுக்கி வைத்து கொண்டு வந்து இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த மலைத் தொடரில் பயிரிட்டதாகச் சொல்லப்படுகிறது.

கெம்மணகுண்டி

கெம்மணகுண்டி


இந்த மலை வாசஸ்தலம் 1400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது மற்றும் ஸ்ரீ கிருஷ்ணராஜ உடையார் IV அவர்களுக்கு கோடைக்கால இல்லமாக இடமளித்தது. இங்கு பாறைத்தோட்டம், குழந்தைகள் பூங்கா மற்றும் பல காட்சி மையங்கள் உள்ளன. அவற்றிலிருந்து நீங்கள் பல இயற்கைக் காட்சிகளை கண்டு மகிழலாம்.

ஹெப்பே நீர்வீழ்ச்சி.

ஹெப்பே நீர்வீழ்ச்சி.


இது கெம்மணகுண்டியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கே நீரோட்டம் தொட்டா ஹெப்பே மற்றும் சிக்கா ஹெப்பே என்ற இரு சிற்றோடைகளை உருவாக்க இரண்டு நிலைகளாகப் பிரிந்து கீழ்நோக்கி வருகிறது. இந்த அருவி தனிமைப் படுத்தப்பட்டுள்ளதால் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சென்றடைவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறது. எனவே முன்ஜாக்கிரதைகள் அறிவுறுத்தப்படுகிறது. மற்றும் அதன் விளிம்பிலேயே தங்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அருவி மழைக்காலங்களில் மட்டும் அபரிமிதமாக பாய்கிறது. மேலும் அந்தக் காடுகளில் அட்டைப் பூச்சிகளின் தொந்தரவு அதிகமாக இருக்கும். அவற்றிலிருந்து விடுபட ஒரு சிறிய பொட்டலம் உப்பை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

காஃபி தோட்டப்பயிர்கள்

காஃபி தோட்டப்பயிர்கள்


உங்கள் அதிகாலை நேர ஒரு கோப்பை மகிழ்ச்சி பானம் எப்படி மற்றும் எங்கிருந்து வருகிறது என்பதைப் பற்றி கற்றுக் கொள்ள சிறிது நேரம் ஒதுக்குங்கள். திகைப்பூட்டும் விருக்ஷங்கள் இருபுறம் சூழ்ந்த சாலையின் தோற்றம், மிகப் பெரிய அளவிலான பசுமையான சுற்றுச்சூழல் மற்றும் திடீர் திடீரெனக் கிளம்பி உங்களை மெல்லக் கவர்ந்திழுக்கும் நறுமணக் காற்று ஆகியன நேர்த்தியான வானிலைக்கு துணை சேர்க்கின்றன.

பத்திரிகையாளர் மரியாதை: wikimedia.org

இஜட் மையப்புள்ளி


நீங்கள் திகைப்பூட்டும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை கண்டுகளிக்க திட்டமிட்டிருந்தால் இஜட் மையப் புள்ளி உங்களுக்கு ஒரு சாதகமான முழுமையான காட்சி மையத்தை வழங்குகிறது.

பத்ரா நதி

பத்ரா நதி

வெண்மை பாறை நீர் படகு சவாரி பத்ரா நதியில் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். எனினும் இது உங்களின் முதன்மையான பயணத் திட்டமாக இருந்தால் இந்த பாலத்தில் கழிப்பதற்காகவே நல்ல நேரத்தை ஒதுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த பாறை படகு சவாரியின் அமைவிடம் சிக்மகளூர் பிரிவின் முல்லையங்கிரியிலிருந்து வெகுதூரத்தில் அமைந்துள்ளது.

More News

Read more about: travel
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+