சோர்வாத் என்ற சிறிய மீன்பிடி கிராமம் 1930-ல் ஜுனகத்தின் நவாப், முகம்மது மகாபத் கஞ்சி III ரசூல் கஞ்சி, ஜுனகத்தின் வட்டார ஆளுநராக இருந்த போது இங்கு கட்டிய கோடை காலத்து அரண்மனையால் புகழ் பெறத் தொடங்கியது. இந்த அரண்மனை இந்தியா சுதந்திரம் பெரும் வரை இவர் ஆட்சியில் தான் இருந்தது.
தரியா மஹால் என்று அழைக்கப்படும் இந்த அரண்மனையின் கட்டடக் கலை இத்தாலிய மற்றும் இஸ்லாமிய பாணிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1974-ல் இந்த அரண்மனையை அரசாங்கம் கையகப்படுத்தி ஒரு ரிசார்ட்டாகா மாற்றி விட்டது.
இங்குள்ள கடற்கரையில் கூர்மையான பாறைகள உள்ளதால் இங்கு நீச்சல் அடிப்பது பாதுகாப்பானதாக இருக்காது. ஆனாலும் இங்கே கட்டுமர சவாரியும் அருகில் இருக்கும் மீன்பிடி கிராமங்களுக்கும் சென்று வரலாம்.
வார இறுதி நாட்களில் ஓய்வெடுக்கவும் நேரத்தை செலவு செய்யவும் இது ஒரு புகழ் பெற்ற தலமாகும். அருகில் இருக்கும் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு தங்கள் விசை படகை இரவல் கொடுப்பார்கள்.
இங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கீர்த்தி மந்திர் என்ற இடத்தில் தான் மகாத்மா காந்தி பிறந்தார். இங்கு சுற்றுலா வருபவர்கள் அங்கேயும் சென்று வரலாம்.



Click it and Unblock the Notifications