கூர்க் பகுதியில் உள்ள மற்றும் ஒரு அழகான நீர்வீழ்ச்சி இந்த மல்லலி நீர்வீழ்ச்சி ஆகும். இது குமாரதாரா ஆற்றில் அமைந்துள்ளது. புஷ்பகிரி மலையின் அடிவாரத்தினல் 62 மீட்டர் உயரத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சி விழுகிறது.
இந்த இடம் கூர்க் பகுதியில் சோம்வார்பேட் நகரத்துக்கருகில் உள்ளது. சோம்வார்பேட்டிலிருந்து மல்லலி நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ஹஞ்சிநல்லி எனும் கிராமத்துக்கு பேருந்துகள் உள்ளன. அங்கிருந்து நடைப்பயணமாக மட்டுமே இந்த நீர்வீழ்ச்சிக்கு வர முடியும்.ஏனெனில் நீர்வீழ்ச்சிக்கு வரும் வழி குறுகலாகவும் கரடு முரடாகவும் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடைக்காலத்தில் இந்த ஆறு வறண்டு விடுவதால் மழைக்காலத்தில் இந்த நீர்வீழ்ச்சியை பார்க்க செல்வது சிறந்தது. மழைக்காலத்தின்போது தன் முழு வேகத்துடன் உயரத்திலிருந்து நீர் விழும் இந்த நீர்வீழ்ச்சியில் அச்சமயம் நீராவி போன்ற நீர்ச்சிதறல் அருவியைச் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இந்த காட்சி மெய்சிலிர்க்க வைக்கும் பரவச மனோ நிலைக்கு சுற்றுலா பயணியை இழுத்துச்செல்லக்கூடியது.



Click it and Unblock the Notifications