ஹொன்னேமரடு சுற்றுலாப்பிரதேசத்திற்கு வருகை தரும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய அம்சம் இந்த வரதபுரா ஸ்தலம் ஆகும். இங்கு 20 நூற்றாண்டில் முக்கிய யோகிகளுள் ஒருவராக கருதப்படும் ஸ்ரீ ஸ்ரீதர ஸ்வாமியின் சமாதி அமைந்துள்ளது.
இவரது ஆசிரமமான ஸ்ரீ ஸ்ரீதர ஸ்வாமி மடமும் இதே ஸ்தலத்திலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நகரம் வரதஹல்லி மற்றும் வத்தல்லி என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது.
இந்த ஸ்தலத்தை அடைவதற்கு பயணிகள் சாகரா நகர எல்லையில் ஜோக் ரோடு முடியும் இடத்திலிருந்து 6 கி.மீ தூரம் உட்புறமாக பயணிக்க வேண்டியிருக்கும்.