தாகூர் பார்க் என்றழைக்கப்படும் இந்த பூங்கா தலச்சேரி பகுதியிலுள்ள பிரபல்யமான சுற்றுலா அம்சமாகும். ஓய்வாக பொழுது போக்குவதற்க்கு மிகவும் பொருத்தமான சூழலை இது கொண்டுள்ளது.
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு அங்கமான மாஹே எனும் சிறு நகரத்தில் இது அமைந்துள்ளது. நீண்டகால ஃபிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் தாக்கமாக இந்நகரத்தின் தெருக்கள் நேர்க்கோட்டு சந்திப்புகளாக உருவாக்கப்பட்டிருப்பதை காணலாம்.
தனித்தன்மையான பாரம்பரியம் மற்றும் வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ள மாஹே நகரம் பயணிகள் சுற்றிப்பார்க்க விரும்பும் அற்புதமான சூழலைக் கொண்டுள்ளது.
தலச்சேரியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் இந்த தாகூர் பார்க் அமைந்துள்ளது. பின்னாளில் ஃபிரெஞ்சு நாட்டு அடையாள சின்னமாக மாறிய மரியன்னா எனப்படும் உருவச்சிலையையும் இந்த பூங்காவில் பார்க்கலாம்.
ஃபிரெஞ்சு புரட்சியின் 100 வது ஆண்டு நிறைவை ஒட்டி 1789ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்த சிலையின் கீழ் ‘ சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்’ எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
சுதந்திர போராட்ட தியாகிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு நினைவுச்சின்னமும் இந்த பூங்கா வளாகத்தின் உள்ளே இடம் பெற்றுள்ளது. கவர்ன்மெண்ட் ஹவுஸ் எனும் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சத்திற்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த பூங்காவை சுலபமாக சென்றடையலாம்.