தென்னிந்தியாவில் ஆன்மிக டூர் செல்வதற்கு ஏற்ற மாநிலங்களில் ஒன்றாக இருப்பது கர்நாடகா. இங்குள்ள ஆன்மீகத் தலங்கள், இயற்கை எழில், வரலாற்று நினைவுச் சின்னங்கள், கடற்கரைகள், மலைப்பகுதிகள் என பலதரப்பட்ட அனுபவங்களை பக்தர்களுக்கு வழங்கக் கூடியதாக உள்ளது. கர்நாடகாவில் மிகவும் சக்தி வாய்ந்த, புகழ்பெற்ற பல கோவில்கள் உள்ளன. வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டியவையாக கொல்லூர் மூகாம்பிகா, உடுப்பி கிருஷ்ணன் கோவில், முருதேஸ்வரர் போன்ற கோவில்கள் உள்ளன.

கர்நாடகாவில் ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்காக IRCTC புதிய சுற்றுலா திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த சுற்றுலா திட்டம் ஆன்மீகத் தலங்களையும் இயற்கைச் சுவாரஸ்யங்களையும் ஒருங்கிணைத்து பயணிகளுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தருகிறது.
சுற்றுலாவின் முக்கிய சிறப்பம்சங்கள்
* 6 நாட்கள், 5 இரவுகள் கொண்ட விரிவான பயண திட்டம்
* குறைந்த செலவில் அதிக வசதிகள், AC ரயில் பயணம், வசதியான தங்குமிடம், உணவுகள்
* அனைத்து முக்கிய ஆன்மீக தலங்களின் தரிசனம் பயணத்திற்கு அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகள்
* உயர் தரத் தங்குமிடம் மற்றும் பாதுகாப்பான பயண வசதிகள்
பயணத்திற்கான திட்டம் - எந்த நாளில் எந்த இடம்?
* முதல் நாள் - கோகர்ணாவிற்கு சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் இருந்து IRCTC ரயிலில் பயணம் தொடக்கம்
- கர்நாடகாவின் புகழ்பெற்ற கோகர்ணா மஹாபலேஷ்வரர் கோவில் தரிசனம்
- ஓம் பீச் மற்றும் குட்லே பீச் போன்ற அமைதியான கடற்கரைகளில் சந்தோஷமான நேரம்
* இரண்டாம் நாள் - முருதேஷ்வர்
- இந்தியாவின் மிகப்பெரிய சிவன் சிலையைக் கொண்ட முருதேஷ்வர் கோவில், அரபிக்கடல் கரையில் அமைந்த கோவில் மற்றும் கடற்கரை பயணம், ஸ்கூபா டைவிங் போன்ற கடல் விளையாட்டுகளை அனுபவிக்கும் வாய்ப்பு.
* மூன்றாம் நாள் - உடுப்பி
- புகழ்பெற்ற உடுப்பி கிருஷ்ணர் கோவில் தரிசனம்
- மால்பே பீச் மற்றும் செயிண்ட் மேரிஸ் தீவு சுற்றுப்பயணம்
- உணவுப் பிரியர்களுக்கு சிறந்த வாய்ப்பு உடுப்பி உணவகங்களில் சுவையான உணவுகளை அனுபவிக்கலாம்
* நான்காம் நாள் - சிருங்கேரி
- ஆதிசங்கரர் நிறுவிய சிருங்கேரி சரதா பீடம் தரிசனம்
- பசுமை நிறைந்த துங்கா நதி கரையில் அமைந்த ஆலயம்.
- தத்தாத்ரேய கேஷவ கோவில் மற்றும் வித்யாசங்கரர் கோவில் சுற்றுப்பயணம்

* ஐந்தாம் நாள் - தர்மஸ்தலம்
- பாரம்பரிய கோவில் நகரம். புகழ்பெற்ற மஞ்சுநாத கோவில் தரிசனம்
- ராம மந்திரம், அனந்தபாத்மநாபா கோவில் மற்றும் லட்சுமி நரசிம்மர் கோவில் தரிசனம்
- நதிநீர் ஸ்நானம் மற்றும் பக்தியுடன் யாகங்கள் செய்யும் வாய்ப்பு
* ஆறாம் நாள் - குக்கே சுப்ரமணியம்
- நாகதோஷ பரிகாரத்திற்காக பிரசித்தி பெற்ற குக்கே சுப்ரமணியர் கோவில்,பசுமை நிறைந்த மேடு, மலைப்பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையில் அமைந்த அமைதியான சூழல், புனிதமான ஆறு அருகே வழிபாடு
சுற்றுலா தொகுப்பில் உள்ள வசதிகள்
IRCTC-ன் இந்த சுற்றுலா திட்டம் பயணிகளுக்கு அனைத்து வசதிகளுடன் குறைந்த செலவில் வழங்கப்படுகிறது.
* பயண வசதி - AC ரயில் பயணம், வசதியான வாகன வசதி,
* தங்குமிடம் - உயர்தர ஹோட்டல்கள், இரவு விடுதிகள்
* உணவு - காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு (சைவம் மற்றும் அசைவம்)
* வழிகாட்டிகள் - அனுபவம் வாய்ந்த சுற்றுலா வழிகாட்டிகள்
* பாதுகாப்பு - சுற்றுலா குழுவுக்கு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்
எவ்வாறு பதிவு செய்யலாம்?
இந்த பயணத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் IRCTC இணையதளம் (www.irctctourism.com) அல்லது அருகிலுள்ள IRCTC அலுவலகத்துக்கு சென்று முன்பதிவு செய்யலாம்.
இந்த சுற்றுலா திட்டத்தை தேர்வு செய்ய காரணம்
- குறைந்த செலவில் சிறந்த அனுபவம்
- ஆன்மீக மற்றும் இயற்கை சுற்றுலா ஒன்றாக இணைந்தது
- IRCTC-இன் பாதுகாப்பான மற்றும் வசதியான பயண ஏற்பாடு
- பயணிகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக சுற்றுலா அனுபவிக்கலாம்
கட்டண விபரம் :
இந்த கோவில் சுற்றுலா பேக்கேஜிற்கு ஒரு நபருக்கு ரூ.15,130 வசூல் செய்யப்படுகிறது. இது ஏசி அல்லாத மூன்று நபர்கள் தங்கும் அறையை பகிர்ந்து கொள்பவர்களுக்கான கட்டணம் ஆகும். தனி நபருக்கான தங்கும் அறை உள்ளிட்ட வசதிகள் பெற விரும்புபவர்களுக்கு ரூ.35,070 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏசி வகுப்பில் தனியாக பயணிக்க விரும்புவர்களுக்கு ரூ.38,100ம், 3 பேர் பகிர்விற்கு ரூ.18,150 ம் வசூல் செய்யப்படுகிறது.



Click it and Unblock the Notifications






