உலகப்பிரசித்திப் பெற்ற திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவதால், அவ்வப்போது இலவச மற்றும் சிறப்பு தரிசனங்களை அறிமுகம் செய்து வருகிறது. இப்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்திய புதிய வசதி மூலம் பக்தர்கள் எளிதாக வாட்ஸ்அப் மூலம், திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். அதை எப்படி செய்வது என்று இங்கே பார்ப்போம்!
சில நேரத்தில் சிரமப்படும் பக்தர்கள்
திருப்பதி தரிசன டிக்கெட்டை பெறுவதில் பக்தர்களுக்கு சிரமம் இருந்து வருகிறது. தேவஸ்தானத்தை பொறுத்தவரை, ஆன்லைனில் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டுமென்றால், மூன்று மாதங்களுக்கு முன்னதாக தேவஸ்தானம் அறிவிக்கும் நாளில் மட்டுமே செய்ய முடியும். அன்றைய தினம் ஏராளமானோர் இதற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்பதால், இணையதளம் சில நேரங்களில் செயல்படாமல் போவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.

வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் முன்பதிவு
இவ்வாறு ஆன்லைனில் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்ய இயலாதவர்கள், SSD டோக்கன் அல்லது தரிசன வரிசையில் சென்று மட்டுமே தரிசிக்க முடியும் என்ற நிலை நீடித்தது. இந்த சூழலில் தான் பக்தர்களின் வசதிக்கேற்ப தரிசன டிக்கெட் பெறும் முறையை எளிதாக்கும் விதமாக ஆந்திர மாநில அரசு ஒரு முன்னெடுப்பை மேற்கொள்கிறது. அதன்படி பக்தர்கள், வாட்ஸ்அப் மூல எளிதாக தரிசன டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்.
பக்தர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மன மித்ரா
மக்களுக்கான சேவைகள் அனைத்தையும் Mana Mitra என்ற திட்டத்தின் கீழ் கொண்டு வர ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதை Whatsapp governance என்றும் குறிப்பிடுகிறார்கள். மக்களுக்கான மற்ற சேவைகளுடன் விஜயவாடாவில் உள்ள துர்கா மல்லேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீசைலம், ஸ்ரீகாளகஸ்தி, சிம்ஹாசலம், அன்னவரம், திருமலையில் உள்ள துவாரகா உள்ளிட்ட கோவில்களின் சேவையையும் வாட்ஸ்ஆப் மூலம் வழங்க திட்டமிட்டுள்ளார்கள்.

திருமலை தரிசன டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம் எவ்வாறு முன்பதிவு செய்வது?
· அதிகாரப்பூர்வ மன மித்ரா வாட்ஸ்அப் எண்: 9552300009 ஐச் சேமிக்கவும்
· வாட்ஸ்அப்பில் இந்த எண்ணுக்கு 'ஹாய்' என்று அனுப்பவும்.
· கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து 'கோயில் முன்பதிவு சேவைகள்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
· சாட்பாட் தரிசன டிக்கெட் கிடைக்கும் தன்மை பற்றிய விவரங்களை வழங்கும்.
· அறிவுறுத்தப்பட்டபடி பணம் செலுத்தும் செயல்முறையைத் தொடரவும்.
· பணம் செலுத்துதல் வெற்றிகரமாக முடிந்ததும், உங்கள் மின்-டிக்கெட் உங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பப்படும்.
· கோயில் நுழைவுக்கான டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து அச்சிடுங்கள்.
விரைவில் ஒருங்கிணைக்கப்படும் கூடுதல் சேவைகள்
தரிசன டிக்கெட் முன்பதிவு தவிர, ஆந்திர அரசு 'மனா மித்ரா' சேவைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதில், கோயில் தங்குமிடங்களுக்கான அறை முன்பதிவுகள், கோயில் அறக்கட்டளைகளுக்கு நன்கொடைகள் மற்றும் ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஆகியவை சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெகுவாக மக்கள் கொடுத்த வரவேற்பு
ஜனவரி 30, 2025 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து, 'மனா மித்ரா' வாட்ஸ்அப் சேவைகள் மூலம் 2.64 லட்சத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குடிமக்களுக்கான அணுகலை மேம்படுத்த அடுத்த 45 நாட்களுக்குள் 161 கூடுதல் சேவைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. இந்த டிஜிட்டல் முயற்சி கோயில் வருகைகளை மிகவும் வசதியாகவும், திறமையாகவும், அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறது, குறிப்பாக நேரில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் சவாலாக இருக்கும் பக்தர்களுக்கு.
கூடுதல் கோயில்களையும் சேர்க்க திட்டம்
'மன மித்ரா' திட்டத்தின் கீழ், திருமலை, விஜயவாடாவின் துர்கா மல்லேஸ்வர சுவாமி, ஸ்ரீசைலம், ஸ்ரீகாளஹஸ்தி, சிம்ஹாசலம், அன்னவரம் மற்றும் துவாரகா திருமலை கோயில்களுக்கான டிக்கெட் முன்பதிவுகள் உட்பட பல கோயில் சேவைகள் வாட்ஸ்அப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை புனித யாத்திரை அனுபவத்தை எளிதாக்குவதையும் கோயில் கவுண்டர்களில் நீண்ட வரிசைகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications






